கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் தனியார் துறையின் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் சிவி.கணேசன், வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு  இளைஞர்களுக்கு பணி ஆணையினை வழங்கினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சி.வி. கணேசன் பேசினார்.


அப்போது பேசிய அவர், ”தமிழக முதலமைச்சர் ஆணைகினங்க இதுவரை 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தந்துள்ளோம். இரண்டாவது வேலை வாய்ப்பு முகாம் இன்று கோவையில் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 20 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கின்றோம். டிசம்பர் மாதம் இறுதிக்குள் 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்படும். 100வது வேலை வாய்ப்பு முகாமில் முதலமைச்சர் பங்கேற்று பணிக்கான ஆணையை வழங்குவார்.


72 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறோம். இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே தமிழ்நாடு அரசின் நோக்கம். இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாமில் ஏழு லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தருவதே நோக்கம். இனி வரும் முகாமில் மாற்று திறனாளிகளுக்கு அதிகம் கவனம் செலுத்துவோம்” எனத் தெரிவித்தார்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண