போல்ட் நட்டினை விழுங்கிய எலக்ட்ரீசியன் மூச்சுத் திணறலுடன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அதனை அகற்றினர்.


கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். 55 வயதான இவர் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் சம்சுதீன் கடந்த 18-ஆம் தேதியன்று எலக்ட்ரிகல் வேலையை செய்து கொண்டு இருந்துள்ளார். போல்ட் நட் ஒன்றினை வாயில் வைத்தபடி வேலை பார்த்த கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சம்சுதீன் அந்த போல்டு நட்டை விழுங்கினார். இதனால் அவருக்கு இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சக தொழிலாளர்களிடம் தெரிவித்ததை அடுத்து, உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.




தொடர்ந்து அவரை மருத்துவர்கள் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்து மார்பில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்தனர். அதில் அவர் விழுங்கிய போல்ட் நட் இடது பக்க நுரையீரல் செல்லும் வழியில், மூச்சுக்குழாயில் சிக்கிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.  இதையடுத்து காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மருத்துவர் அலி சுல்தான் தலைமையில் மருத்துவர்கள் சரவணன், மயக்கவியல் துறை மணிமொழி, செல்வன், மதன கோபாலன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இணைந்து சம்சுதினுக்கு மூச்சுக் குழாய் உள்நோக்கி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து  நட்டை வெற்றிகரமாக அகற்றினர். தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். 15 நிமிடங்களில் ஆபத்தான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த மருத்துவர்களுக்கு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவனை முதல்வர் டாக்டர் நிர்மலா பாராட்டு தெரிவித்தார். கோவையில் இரும்பு நட்டை விழுங்கி ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக சிகிச்சை கொடுத்து வெற்றிகரமாக நட்டை அகற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண