பொள்ளாச்சி அருகே கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை ; திமுக பிரமுகர் கைது

வட்டியை முறையாக கொடுக்கவில்லை என கிருஷ்ணகுமார், வரதராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தை பேசியதால் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் வரதராஜ். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர் தினசரி கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரதராஜ் பொள்ளாச்சி சேர்ந்த திமுக பிரமுகர் கிருஷ்ண குமார் என்பவரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் கிருஷ்ணகுமார் கந்துவட்டி என்ற பெயரில் வரதராஜிடம் அதிக வட்டி வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வட்டியை முறையாக கொடுக்கவில்லை என கிருஷ்ணகுமார், வரதராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தை பேசியல் கொலை மிரட்டல் விடுத்தாகவும் கூறப்படுகிறது.

Continues below advertisement

 

கிருஷ்ண குமார்
கிருஷ்ண குமார்

இதன் காரணமாக மனம் உடைந்த வரதராஜ் தான் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டது குறித்து கடிதம் மூலம் எழுதி விட்டு  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் வரதராஜ் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனைக்கு வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணைக்கு பின்னர் கிருஷ்ணகுமார் மீது கந்துவட்டி கொடுமை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கந்து வட்டி கொடுமையால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கில் தீர்ப்பு

கோவை மாவட்டம்  பொள்ளாச்சி காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமியை பொன்னுசாமி (53) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். அவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். பொன்னுசாமிக்கு 5 வருட சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய காவலரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050,   +91 44 2464 0060

Continues below advertisement