கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை விட கூடுதல் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று தொற்று பாதிப்பு 500 க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று 498 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 20 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3805 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 922 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 14 ஆயிரத்து 149 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 10 பேர் உயிரிழந்தனர். இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2051 ஆக உயர்ந்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடித்து வருகிறது. ஈரோட்டில் இன்று 411 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 4080 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 89934 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 85260 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 594 ஆகவும் உயர்ந்துள்ளது.




திருப்பூர் மாவட்டத்தில் இன்று 256 பேருக்கு இன்று கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 342 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1666 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 6 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 82723 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 80294 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 763 ஆகவும் உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. நேற்று 87 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், இன்று 90 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களில் 15 பேருக்கு இன்று கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது. 55 பேர் குணமடைந்துள்ள நிலையில், 710 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவதால், சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. கடந்த மூன்று நாட்களாக உயிரிழப்புகள் பதிவாகவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 28443 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27569 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 164 ஆகவும் உள்ளது.