சேலம் கோட்டத்தில் ஈரோடு ரயில் நிலையத்தில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 14 வரை ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக சில ரயில்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்று பாதையில் இயக்கப்பட இருக்கிறது.



ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28 ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788),  திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25 ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787),

 



சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31 ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சண்டிகர் விரைவு ரயில் (12687), ஓகாவில் இருந்து ஜூலை 29 ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568), தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567), கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616), இருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7 14 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில் (17615),




தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூர் விரைவு ரயில் (16235), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்கு பதிலாக கரூர், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.