கோவை பேரூர் பகுதியில் உள்ள சேரன் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் சதீஷ் பங்கேற்றார்.


நடிகர் சதீஷ்:


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வித்தைக்காரன் படப்பிடிப்பு கோவையில் நடந்தது. இரு வாரங்களுக்கு பிறகு கோவைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்லூரி கரும்பலகையை பார்க்கும் போது யார் பேசுகிறார்கள் என எழுதி வையுங்கள் என்று சொன்னால் அதில் என் பெயர் தான் இருக்கும். கரும்பலகையை பார்த்தால் இப்பொழுதும் பயம் வரும். அவ்வப்போது கனவில் தேர்வு எழுவதுவது போல் தோன்றுவதால் அதிர்ச்சியில் எழுந்து அமர்வேன்.


படிக்கும்போது எந்த விதமான தவறான விசயத்திலும் ஈடுபட வேண்டாம். மது, புகைபழக்கம் உள்ளிட்டவை உடல்நலத்தை கெடுப்பதோடு, கல்வியையும் கெடுக்கும். ஆசிரியர்களிடம் மரியாதை நடந்து கொள்ள வேண்டும். நாங்கள் படிக்கும் போது ஆசியருக்கு பயப்படுவோம். இப்போது உள்வாடாக மாறிவிட்டது. நிறைய வீடியோக்களில் மாணவர்கள் தகாத வார்த்தைகள் பேசுவதை பார்க்கும் போது வேதனையளிக்கிறது.


படித்தால் நல்லது:


நாய்சேகர் படத்திற்கு பிறகு சட்டம் என் கையில் என்ற படத்தை முடித்துள்ளோம். இது ஒரு நல்ல திரில்லர் படமாக இருக்கும். லோகேஷ் கனகராஜின் இணை இயக்குநர் வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படம் அடுத்த வெளியீடாக இருக்கும். அடுத்த வாரம்  பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. ஓடிடி மிகப்பெரிய வளர்ச்சியாக இருக்கிறது. அது நல்ல தொழிலாக இருக்கிறது.


இருந்தாலும் தியேட்டர் ரெஸ்பான்ஸ் நன்றாக இருக்கும். இந்த மென்பொருள் உருவாக்கிருப்பது கொரோனோவிற்கு நல்ல வளர்ச்சியாக பார்க்கபடுகிறது. நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். படத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் சிகரெட் தொடர்பான காட்சிகளில் நடிகர்கள் நடிக்கிறார்கள். திரைபட்டங்களில் உள்ள விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். விஜய்யுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனப் படித்தால் நல்லது தானே? இன்னும் விஜய் மாணவர்களுக்கு உதவும் இது போன்ற திட்டங்களை செய்வார்” எனத் தெரிவித்தார்.




நல்லதை எடுத்துக்கொள்ளுங்கள்:


மாமன்னன் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பான என்ற கேள்விக்கு, ”ஜெயம் ரவி கூறியது போல் நானும் தூங்கிவிட்டேன். கருத்து பகிரப்பட்டதை நான் ஒரு பார்வையாளனாக பார்க்கிறேன். தேவர் மகன் திரைப்படம் எனக்கு மிகவும் படித்த படம். இறுதியில் வரும் வன்முறை வேண்டாம். சாதி, மதங்களை பார்க்காமல் குழந்தைகளை படிக்க வையுங்கடா என்ற நல்ல கருத்தை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன். மாரி்செல்வராஜ் எழுதிய கடிதத்தை படிக்கவில்லை” எனப் பதிலளித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ”நான் அணிந்திருக்கும் டீ-சர்ட் அன்பளிப்பாக வந்ததது. டீ சர்ட்டுக்கு நான் அவ்வளவு செலவு செய்யமாட்டேன். இது உண்மை என தெரியவில்லை. திருப்பூரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட இதே மாதிரி கிடைக்கிறது. துவைத்து பார்த்தால் தான் எனக்கே தெரியும்” எனத் தெரிவித்தார்.


Join Us on Telegram: https://t.me/abpnaduofficial


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண