Aayirathil Oruvan 2: கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிரபல இசையமைப்பாரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் லைவ் இன் கான்செர்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஜி.வி. பிரகாஷ் குமார்(GV Prakash Kumar) ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், ”எனது முதல் கான்செட் கோவையில் நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2006ம் ஆண்டில் இருந்து நான் இசை அமைத்து வருகிறேன். தற்போது வரை 98 படங்களுக்கு இசை அமைத்துள்ளேன். 100 திரைப்படங்கள் வரை வந்துவிட்டேன். கோவையில் நடைபெறும் லைவ் நிகழ்வு தரமான நிகழ்வாக இருக்கும். ரெக்கார்டிங்கில் இருந்து லைவாக பண்ணுவது எதிர்பார்பாக உள்ளது.




படத்தில் வரும் பாரம்பரிய இசை போன்ற இசைகளை கதை தான் முடிவு செய்யும். ஆயிரத்தில் ஒருவன்(Aayirathil Oruvan) படம் போன்ற இசைகள் உள்ளது. லைவ் நிகழ்வில் சத்திய பிரகாஷ், ஹரிணி, ஸ்வேதா மோகன், மாளவிகா போன்ற பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்வில் 40-45 பாடல்கள் பாடப்பட உள்ளன. லைவ்வில் சினிமாவில் கேட்டதை விட சிறப்பு இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2  படத்தை எதிர்பார்த்து இருக்கிறேன். அது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நானும் வெயிட் பண்ணுறேன். ரஜினி சார் பண்ணாத படமும் இல்லை, கமல் சார் பண்ணாத படமும் இல்லை. சிகப்பு ரோஜா போன்ற படங்களும் உள்ளது. சிவப்பு மஞ்சள் பச்சை குடும்பப் படம், டார்லிங் படம் போன்றவை டிவியில் பிளே பேக் ஆன படம்.




ரிபெல் திரைப்படம் அரசியல் சார்ந்த படம். ஆர்டிஸ்டாக இப்படித்தான் படம் செய்ய வேண்டும் என்ற எந்த வரைமுறையும் இல்லை. அனைத்து படமும் பண்ன வேண்டும். லைவ் கான்செர்ட் பன்னுவது ஒரு குவாலிட்டி மேஜிக். செலிபரேசன் ஆப் லைப்பை ப்ரமோசன் பண்ணுவோம். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ஆர்யா வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.  நீங்கள் மகிழும்படியாக பர்வார்மன்ஸ் இருக்கும். ஜல்லிகட்டு தீர்புக்கு முதலில் ட்விட் செய்து இருந்தேன். இளைஞர்களால் ஜல்லிகட்டு போராட்டம் கருத்து வேறுபாடு இல்லாமல் நடந்தது. தற்போது வந்த ஜல்லிகட்டு தீர்ப்பு கூஸ்பாம் மூமண்ட் ஆக இருந்தது. ஏ.ஆர்.ரகுமான் ஒரு லெஜண்ட். நான் இப்போது தான் வளர்ந்து வருகிறேன். ரகுமான் உடன் யாரையும் வைத்து கம்பேர் பண்ணக்கூடாது. கோவையில் அதிகபட்சமாக தமிழ் பாடல்கள் பாடுவோம். இசையமைப்பாளர் வரி தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம். திரைப்பட இயக்கத்திற்கு 2 வருடம் நேரம் செலவழிக்க வேண்டும். அந்த நேரம் இப்போது எனக்கு இல்லை. ஆனால் ஒரு படத்தை தயாரிக்க உள்ளேன்” எனத் தெரிவித்தார். பின்னர் யாத்தி யாத்தி என்ற பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை நிகழ்ச்சி வருகின்ற 27 ம் தேதியன்று நடைபெற உள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை ண