மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் (44). தொழில் அதிபரான இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன், அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேனின் மூலமாக அவரது சகோதரி கோவை போத்தனூர் சத்ய சாய் நகரைச் சேர்ந்த பள்ளி ஆசிரியையான ஹேசல் ஜேம்ஸ் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.


பள்ளி ஆசிரியை:


ஆரம்பத்தில் ராஜேஷை திருமணம் செய்து கொள்வதாகவும், தான் திருமணம் ஆகாத பெண் எனக் கூறி ஹேசல் ஜேம்ஸ் ராஜேஷ் உடன் பழகி வந்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகி விட்டது என்றும், கணவர் இறந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இருந்த போதும் ராஜேஷ் ஹேசல் ஜேம்ஸ் உடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். 


திடீரென ஒரு நாள் ஹேசல் ஜேம்ஸ் தனக்கு திருமணமானது உண்மை என்றும், கணவன் இறக்கவில்லை என்றும், விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும், தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். இதை நம்பிய ராஜேஷ் 90 ஆயிரம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும், அதற்கு உதவி செய்யுமாறு கூறியிருக்கிறார்.


20 லட்சம் 


இதனால் ராஜேஷ் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம், அழகு சாதனப் பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி கொடுத்துள்ளார். பொருட்களை ஹேசல் ஜேம்ஸ் தனது தந்தை பெயரில் அனுப்புமாறு கூறி வாங்கியுள்ளார். ஸ்கோடா காரை தனது அண்ணன் விவின் கிறிஸ்டோ பெயரில் ஹேசல் ஜேம்ஸ் பதிவு செய்து கொண்டுள்ளார்.




இந்நிலையில் ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்ததும், இதேபோல பல ஆண்களிடம் பழகி வந்ததும் ராஜேஷ்க்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் கேட்ட போது, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக் கூடாது எனக் கூறியிருக்கிறார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ஹேசல் ஜேம்ஸ் ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.


கொலை மிரட்டல்:


பின்னர் ராஜேஷ் தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டபோது, ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது எனவும், குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டியுள்ளார். பின்னர் ஹேசல் ஜேம்ஸ் 20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது என கூறி மிரட்டி இருக்கிறார். இதையடுத்து குடும்பத்துடன் இணைந்து தன்னை ஏமாற்றி பணம் பறித்ததாக போத்தனூர் காவல் நிலையத்தில் ராஜேஷ் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் ஹேசல் ஜேம்ஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண