சென்னை ; தண்டையார்பேட்டை போலீசார் அதிரடி !! வலி நிவாரணி மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞர் !!
சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் J.P. கோவில் தெரு, N.N கார்டன் 8 வது தெரு சந்திப்பில் கண்காணித்து கொண்டிருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 நபர்களை பிடித்து விசாரணை செய்தனர்.
அவர்களை சோதனை செய்த போது அவர்கள் உடல் வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன் பேரில் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, சட்ட விரோதமாக உடல் வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ஆகாஷ் ( வயது 23 ) என்ற நபரை கைது செய்தனர்.
மேலும் 15 வயதுடைய இளஞ்சிறாரிடம் போலீசார் விசாரணை செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 45 எண்ணிக்கைகள் கொண்ட NITRAZEPAM மற்றும் NITRAVET உடல்வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆகாஷ் என்பவர் மீது ஏற்கனவே 1 குற்ற வழக்கு உள்ளதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஆகாஷ் என்பவர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். 1 இளஞ் சிறார் , சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
மெட்ரோ பணிக்காக வைத்திருந்த காப்பர் ஒயர்கள் , கிரைண்டிங் மெஷின்களை திருடிய 2 நபர்கள் கைது
சென்னை புனித தோமையர் மலை மெட்ரோ ரயில் கட்டுமான நிறுவனத்தில் Project Manager-ஆக வேலை செய்து வரும் சுந்தரேஷ் ( வயது 48 ) என்பவர் புனித தோமையர் மலை, Paulwells சாலை, பேக்கரி எதிரே மெட்ரோ வேலையை முடித்து விட்டு பொருட்களை, அங்கு இருந்த இரும்பு கன்டெய்னருக்குள் வைத்து பூட்டி விட்டு தனது பணியாட்களுடன் சென்றுள்ளார்.
பின்னர் வந்து கன்டெய்னரை திறந்து பார்த்த போது சுமார் 750 மீட்டர் நீளமுள்ள காப்பர் ஒயர்கள், 3 கிரைண்டிங் மெஷின்கள் மற்றும் 2 Pusser Block இயந்திரம் ஆகிய பொருட்களை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுந்தரேஷ் புனித தோமையார்மலை காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புனித தோமையார் மலை காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ஆதவன் ( வயது 23 ) , பிரவீன் குமார் ( வயது 23 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.
விசாரணையில் , திருடிய பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து பணம் பெற்று செலவு செய்துள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
