பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய சம்போ செந்திலை பிடிக்க முடியாத காவல்துறையினர் தனது மகனை உள்நோக்கத்தோடு சுட்டுக் கொண்டு விட்டதாக புகார்* *ராயப்பேட்டை பிணவறை முன்பு காக்கா தோப்பு பாலாஜியின் தாயார் கண்மணி கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.



ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள சம்போ செந்திலின் தூண்டுதலின் பேரில் தனது மகன் பாலாஜியை காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 


பல்வேறு கொலை, ஆள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையதாக காக்கா தோப்பு பாலாஜி என்பவரை இன்று அதிகாலையில் ஜீவா ரயில் நிலையம் அருகே போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். என்கவுண்டர் செய்யப்பட்ட பாலாஜியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.. இந்த நிலையில் பிணவறைக்கு வந்த பாலாஜியின் தாயார் கண்மணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,


கடந்த 10 ஆண்டுகளாக என் மகன் எவ்வித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்த நிலையில், காவல்துறையினர் வேண்டுமென்றே தன் மகனை சுட்டுக் கொன்று விட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஒருவரான சம்போ செந்திலை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருவதாகவும், அவரது மனைவியை கூட காவல்துறையினர் விசாரிக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் தனது மகன் பாலாஜியின் நண்பர்கள் ஆறு பேரை, சம்போ செந்தில் திட்டமிட்டு கொலை செய்துவிட்டதாகவும், தனது மகனை அவரால் கொள்ள முடியாத காரணத்தினால், காவல்துறையினரின் துணையோடு தற்போது தனது மகனை சுட்டுக்கொன்று விட்டதாக பாலாஜியின் தாயார் கண்மணி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். 



கடந்த 10 ஆண்டுகளாக எவ்வித குற்ற செயல்களிலும் ஈடுபடாமல், அறக்கட்டளை தொடங்கி இயலாதவர்களுக்கு உதவி செய்வது, பிறந்தநாளின் போது ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி போன்றவற்றை தொடர்ந்து செய்து வந்த தனது மகன் பாலாஜியை, உள்நோக்கம் மற்றும் சதியின் காரணமாக காவல்துறையினர் சுட்டு கொன்றுவிட்டதாக அவரது தாயார் வேதனையோடு தெரிவித்துள்ளார். வேலூரில் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக தினமும் நீதிமன்றம் சென்று கையொப்பமிட்டு வந்த தனது மகனை, என்கவுண்டர் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில் திட்டமிட்டு சதி செய்து சுட்டுக் கொன்று விட்டதாக அவர் வேதனையோடு குற்றம் சாட்டினார். 


ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நாளிலிருந்து தலைமறைவாக இருந்த சம்போ செந்தில், எனது மகன் பாலாஜி கொல்லப்பட்டு விட்ட நிலையில், வெளியே வருவார் என்றும் அவர் தெரிவித்தார்.