பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மின்சாரமானது தடை செய்யப்படுகிறது. மின் துண்டிப்பு குறித்து பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செப்டம்பர் 4-ம் தேதி புதன் கிழமை தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.


சென்னையில் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.


டி.ஐ.சைக்கிள் மற்றும் மேனாம்பேடு ;


கிருஷ்ணாபுரம், விநாயகபுரம், செங்குன்றம் சாலை, மேனாம்பேடு, பி.ஆர்.ஆர். நகர். ராஜீன் நகர். திருமலைப்பிரியா நகர்.


கோவிலம்பாக்கம் : ஓம் சக்தி நகர், சத்யா நகர். சுபீஷா அவென்யூ, சுசீலா நகர், பி.எம்.டி. நகர். வடக்குப்பட்டு மெயின் ரோடு, பெரியார் நகர், திருவேங்கடம் நகர். தர்மபூபதி நகர், திருவள்ளூர் தெரு, நவீன்ஸ், பெல் நகர் இணைப்பு சாலை (பகுதி)


பள்ளிக்கரணை : காமகோடி நகர் (பகுதி), ஐ.ஐ.டி.காலனி (பகுதி). நாகம்மாள் அவென்யூ, வி.ஜி.பி. ராஜேஷ் நகர் (பகுதி). மா.பொ.சி. நகர் (பகுதி)


கோவை மாவட்டம் ;


எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்ப்படும் பகுதிகளான தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ண கவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணி செட்டிபாளையம், சந்தியா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீலாம்பூர் 110/33-11 பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.


செங்கல்பட்டு மாவட்டம் ;


திருநின்றவூர் 110 கே.வி துணை மின் நிலையத்தில் இருந்து திருநின்றவூர் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகமானது ரத்து செய்யப்படுகிறது.


பெரம்பலூர் மாவட்டம் ;


நன்னை துணை மின் நிலையத்தில் இருந்து பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் இருந்து சின்னார், எரியு,. முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், கலனி வாசல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் ரத்து செய்யப்பட இருக்கிறது.


சேலம் மாவட்டம் ; 


வாழப்பாடி பகுதியில் புதிர்கவுண்டபாளையம் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான ஆரியபாளையம், தளவாய்பட்டி, பி.என்.பாளையம், ஏத்தாப்பூர், கல்யாணகிரி போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது.


தஞ்சாவூர் மாவட்டம் ;


ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான ஊரணிபுரம், பின்னையூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் வினியோகமானது ரத்து செய்யப்படும்


தேனி மாவட்டம் ; 


மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான சின்னமனூர், பாலவராயன்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின்சாரமானது தடை செய்யப்படுகிறது. இதேபோல் வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் இருந்து லோயர்கேம்ப், கே.கே.பட்டி, மணலாறு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகமானது ரத்து செய்யப்படுகிறது.


திருவாரூர் மாவட்டம் ;


பேராளம் துணை மின் நிலையத்தில் இருந்து திருமாலம், உபயவேதஹந்தபுரம், ஆலத்தூர், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரமானது ரத்து செய்யப்பட இருக்கிறது.



திருச்சி மாவட்டம் :


புதுநத்தம் 110/11 KV SS துணை மின் நிலையத்தில் இருந்து காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம், போன்ற பகுதிகளில் காலை 9 மணி 45 நிமிடங்கள் முதல் மாலை 4 மணி வரையிலும், சமயபுரம் 110/22-11 KV SS துணை மின் நிலையத்தில் இருந்து தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி 45 நிமிடங்கள் முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.



உடுமலைப்பேட்டை ;


ஆனைமலை துணை மின் நிலையத்தில் இருந்து ஆனைமலை, வி புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகமானது ரத்து செய்யப்படுகிறது.



விருதுநகர் மாவட்டம் ; 


நல்லமாநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்தில் இருந்து நல்லமாநாயக்கன்பட்டி - சோழபுரம், தேசிகபுரம், ஆவாரந்தை, கிளவிக்குளம், சங்கரலிங்கபுரம், முத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் அனுப்பங்குளம் 110/11 KV SS துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யும் பகுதிகளான அனுப்பங்குளம் - சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, சின்னகம்மன்பட்டி, நாரணபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார வினியோகம் ரத்து செய்யப்படுகிறது.