Mudichur Omni Bus Stand : கிளாம்பாக்கம் தலைவலி தீர்ந்தது .. பயன்பாட்டிற்கு வரும் முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தம்..!

Mudichur Omni Bus Stand : " 150 பேருந்துகள் நிறுத்த கூடிய ஆம்னி பேருந்து நிலையத்தை‌ தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார் "

Continues below advertisement

Mudichur Omni Bus Stand: சென்னை அடுத்த முடிச்சூரில் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 42.70 கோடி மதிப்பில் புதிதாக ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது. 

Continues below advertisement

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்பட்டது. அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில், கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொண்டுவரப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தினமும் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பயணிகள்  பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பௌர்ணமி, அமாவாசை, சுப முகூர்த்த நாட்களில் 80 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்துகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கிளாம்பாகத்தில் தீர்க்கப்படும் பிரச்சினைகள்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிக்கல்கள் படிப்படியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே போன்று ஆகாயம் மேம்பாலம், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் சாலை அமைக்கும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அரசு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் சார்பில் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

ஆம்னி பேருந்துகள் நிலை என்ன ?

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருவதால், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் இல்லாததால் அவதி அடைந்து வருகின்றனர். 

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் - Mudichur omni bus stand 

ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கையை ஏற்று, வண்டலூர் வெளிவட்டச் சாலையில்  முடிச்சூர் அருகே, 5 ஏக்கா் பரப்பில் ஒரே நேரத்தில் 150 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இந்த பஸ் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஓட்டுநா்கள், கிளீனா்கள் என 100 போ் தங்கும் அளவுக்கு இரண்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கா வண்ணம் நிலத்திலிருந்து உயா்த்தி கட்டப்பட்டு கட்டப்பட்டது. தொடர்ந்து இங்கு பேருந்து நிறுத்தும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்குவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

 பயன்கள் என்னென்ன ?

முடிச்சூர் ஆம்னி பேருந்து நிறுத்தும் இடம் பயன்பாட்டிற்கு வந்தால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த ஆம்னி பேருந்துகள் இனி, முடிச்சூர் பகுதியில் இருந்து இயக்கப்படும், இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு குறையும். மேலும் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்போது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன்பாட்டிற்கு வந்த பேருந்து நிலையம்

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முடிச்சூரில் 42.70 கோடி ரூபாய் செலவில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார். அடுத்த சில நாட்களில் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement