சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் மற்றும் துணை பதிவாளர்கள் மாதாந்திரா ஆய்வு கூட்டமானது பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்றது.


இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் ;


ஆவின் பொருட்களை தீவிர சந்தப்படுத்துதல் முயற்சியை ஈடுபடுவதற்கான உத்தரவுகள் வழங்கி இருக்கிறோம். சொசைட்டி மூலமாக ரேஷன் கடைகள் மூலம் ஆவின் பொருள்களை விற்பனை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதே போன்று புதிய பொருட்கள் தேவைப்படுகிறது. அதை மார்க்கெட்டில் தயார் செய்து அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்த வருகிறோம்.


இந்த மாதத்தில் ஒரு சில புதிய பொருட்களை உருவாக்க உள்ளோம்.  இதுவரை இல்லாத அளவிற்கு பால் கொள்முதல் செய்து இருக்கிறோம். ஒரு நாளில் 38 லட்சம் லிட்டர் அளவிற்கு கொள்முதல் பெருகி இருக்கிறது.  பாலின் அளவு குறையாமல் பால் வளர்ச்சியை பெருக கூடிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.


ரேஷன் கடையில் பால் விற்பனை அல்ல பால் பொருட்கள் விற்பனை தான் செய்ய இருக்கிறோம் அது எந்த அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தாது பல ஊரக பகுதிகளில் நகரங்களில் இன்னும் நமக்கான தேவைகள் அதிகமாக உள்ளது என கூறினார்.


தற்போது மக்கள் இணைந்து பணியாற்றக் கூடிய ஒரு சூழல் தான் உள்ளது.  கன்வேயர் ஆட்டோ மிஷின் கொண்டு வர இருக்கிறோம். வெகு விரைவில் ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் கொண்டுவர உள்ளோம் என தெரிவித்தார்.


பணிக்கு வரக்கூடிய பெண்களின் பாதுகாப்பை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என தெரிவித்தார். கிருஷ்ண ஜெயந்திக்கு கூட டிஸ்கவுன்ட் ஆவின் பொருள்களை விற்பனை செய்தோம். எல்லாம் விழா நாட்களிலும் இதுபோன்று விலை குறைவாக பொருட்களை விற்கப்படும். பொருளின் தரத்தை உயர்த்தி அதிக அளவில் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். என்னென்ன தேவை உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் பொருட்களை தயாரிக்க இருக்கிறோம் இந்த மாதமே அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம்.


ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கக் கூடிய பொது மேலாளர் மார்க்கெட்டிங் மேனேஜரிடம் அப்ளை செய்து நகர்புறங்களில் ஆவின் கடையை ஆரம்பிப்பதற்கான உதவி செய்ய தயாராக இருக்கிறோம்.  ஹோல்சேல் டீலர்ஸ் வருகை தந்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான வசதிகள் அவர்களிடம் இருந்தால் கண்டிப்பாக நாங்கள் அதற்கான அனுமதி கொடுப்போம்.


ஆவினில் நெய் உற்பத்தி நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. சிறிய வகை பாக்கெட்டில் ஆவின் நெய்யை உற்பத்தி செய்யவிருக்கிறோம். ஆவின் பொருள்களை வற்புறுத்தி விற்க வேண்டிய அவசியமல்ல அது பொதுமக்களுடைய ஆப்சன் தான் எனவும் எப்போது ஆவினில் காலிபணியிடங்கள் வருகிறதோ அப்போதெல்லாம் டிஎன்பிசி உடன் இணைந்து அந்த பணிகளை நிரப்பி வருகிறோம் என தெரிவித்தார். ஆள் பட்டாறக்குறை வைத்துக் கொண்டு நாங்கள் ஆவினில் உற்பத்தியை செய்ய முடியாது என தெரிவித்தார்.