காஞ்சிபுரம் : கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்கும் அவலம்
சமூக வலைதளங்களில் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Continues below advertisement

மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்கும் புகைப்படம்
காஞ்சிபுரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய காஞ்சிபுரம் சாலை தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அலுவலக கட்டிடத்தில் உள்ள கழிவு நீர் தொட்டியில் பல நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வந்தது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து உள்ள நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தொடர்ந்து கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசி வந்தது.
இதனால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யக்கூடாது என தடை உள்ள போதும் வங்கி நிர்வாகம் அதனை பொருட்படுத்தாமல் கழிவு நீர் தொட்டியில் மனிதர்களை இறக்கி அடைப்பை நீக்கும் பணியை செய்து உள்ளது. இதனை அவ்வழியே சென்றவர்கள் படம் எடுத்து சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு உள்ளனர்
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Continues below advertisement
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Just In
ஒரு பக்கம் எய்ம்ஸ் மற்றொரு பக்கம் டைடல் பார்க்... டாப் கியரில் மதுரை பணிகள் !
கூலிப்படையை விரைந்து கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனையை தமிழ்நாடு அரசு பெற்றுதர வேண்டும் - வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி படுகொலை: மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பு!
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.