உன்னத அர்ப்பணிப்புக்காக நடைபெற்ற தெய்வீக இசைக்கச்சேரியில் ஜெயதீர்த் மேவுண்டி மற்றும் பிரவீன் கோட்கிண்டி ஆகியோர் இசையின் மூலம் பார்வையாளர்களை ஆன்மீகத்தில்  உருகச் செய்தனர்.


சென்னை மியூசிக் அகாதமியில் "ஹே கோவிந்த்" எனும் கிருஷ்ண பகவானுக்கான இசைக்கச்சேரி எய்ம் ஃபார் சேவா நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.


இதில் புகழ்பெற்ற ஜெயதீர்த் மேவுண்டி, பிரவின் கோட்கிண்டி ஆகியோர், இசைக்கலைஞர்களின் குழுவோடு பங்கேற்று ஆன்மாவைத் தூண்டும் வகையில் கச்சேரி நடத்தினர்.  இந்த ஆன்மீக இசைக்கச்சேரி அனைத்து பங்கேற்பாளர்களின் இதயங்களையும் கவர்ந்து உருவாக்கியது. 
பக்தி மற்றும் இசையின் மறக்க முடியாத இரவாக இது அமைந்தது. 


எய்ம் ஃபார் சேவா 2000-ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது. இது தேசிய அளவிலான பொது தொண்டு அறக்கட்டளை. 2001 இல் நிறுவப்பட்ட முதன்மைத் திட்டமான சத்ராலயம் (இலவச மாணவர் விடுதிகள்) ஏழை கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. 


கடந்த இரண்டு தசாப்தங்களாக, 2 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. இந்தியா முழுவதும், தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளித்து மேம்படுத்துவதற்கான  பணியில் எய்ம் ஃபார் சேவா உறுதியாக இருக்கிறது. 


இந்த "ஹே கோவிந்த்" கச்சேரி  பக்தியின் சிம்பொனியாகும்.  இது ஸ்ரீ கிருஷ்ணரின் பஜன்கள் மற்றும் அபாங்க்கள், கிளாசிக்கல் மற்றும் செமி கிளாசிக்கல் பாணிகளை உள்ளடக்கி கொண்டாடப்பட்டது. பூஜ்ய சுவாமி தயானந்தா உள்ளிட்ட துறவிகள் மற்றும் ஞானிகளின் பாடல்கள் மூலம் ஆன்மீக அனுபவத்தை அளித்தது. ஜெயதீர்த் மேவுண்டியின் குரலில்,பிரவின் கோட்கிண்டியின்  புல்லாங்குழல் இசையில், நரேந்திர எல் நாயக் ஹார்மோனியம் வாசிக்க, சூர்யகாந்த் கோபால் சர்வேயின் பக்க வாத்தியத்தொடு, சுகத் மாணிக் முண்டே, யஷ்வந்த் வைஷ்ணவ் உள்ளிட்டோரின் பங்களிப்போடு மிளிர்ந்தது.


இந்த "ஹே கோவிந்த்" ஆன்மீக  இசைக்கச்சேரி சுவாமி தயானந்த கிருபாவை ஆதரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டது.