ELECTRIC TRAIN : புறநகர் ரயில் சேவை 8 நாட்கள் மாற்றம் ..! ரயில்கள் ரத்து .

காட்டாங்கொளத்தூா்-கூடுவாஞ்சேரி நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

Continues below advertisement

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு சென்னையில் நுழைவு வாயிலாக இருக்கும் செங்கல்பட்டில் மற்றும் தாம்பரத்தில் இருந்து நாள்தோறும் 75-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை வரை சென்று வரும். சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து சென்னை நோக்கி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயன்படுத்தி விரைவாக தங்களுடைய பணிகளுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவார்கள்.

Continues below advertisement

காட்டாங்கொளத்தூா்-கூடுவாஞ்சேரி  ரயில்வே பாதையில் பொறியியல் பணிகள் நடக்கவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் 8  நாட்கள் மாற்றம்  செய்யப்படவுள்ளது. பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், சென்னை - தாம்பரம் ரயில்வே பாதையில் ரயில்கள் பாதி வழியில் ரத்து செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அதற்கேற்றார்போல் பயணிகள் தங்களுடைய பயணத்தை திட்டமிட மாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, காட்டாங்குளத்தூர் - கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களுக்கு இடையே, வரும் 15, 17, 18, 20, 22, 24, 25, 27-ம் தேதிகளில் காலை 11.25 மணி முதல் மதியம் 1.25 மணி வரையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மேற்கண்ட நாட்களில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.56 மணி ரயில், கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 10.10 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.50 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 12.20 மணி ரயில் மேற்கண்ட நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும், காலை 11.30 மணி ரயில் (18, 25-ம் தேதிகள் தவிர) மற்ற நாட்களில் கூடுவாஞ்சேரியில் இருந்தும் இயக்கப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1 மணி ரயில் வரும் 18, 25-ம் தேதிகளில் மட்டும் கூடுவாஞ்சேரியில் இருந்து இயக்கப்படும்.

முழு சேவை ரத்து

திருமால்பூர் - சென்னை கடற்கரை காலை 10.40 மணி ரயில் வரும் 15, 17, 20, 22, 24, 27-ம் தேதிகளில் முழு சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக, மேற்கண்ட நாட்களில் மதியம் 12 மணிக்கு திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

Continues below advertisement