சினேகன் கொடுத்த புகார்.. கமல்ஹாசனை குற்றம்சாட்டும் துணைநடிகை.. ஜெயலஷ்மி பேசியது என்ன?
Actress Jayalakshmi; பாடலாசிரியர் சினேகன் ஜெயலட்சுமி மீது அளித்துள்ள மோசடி புகாருக்கு பதில் அளிக்கையில் கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.

Actress Jayalakshmi; பாடலாசிரியர் சினேகன் ஜெயலட்சுமி மீது அளித்துள்ள மோசடி புகாருக்கு பதில் அளிக்கையில் கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது என பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.
திரைப்பட பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்ட சினேகன், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி மீது மோசடி புகார் ஒன்றினை அளித்தார். காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சினேகன்(Snehan), "கடந்த 2015 ஆம் ஆண்டு சினேகம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகிறேன். அதன்மூலம் பலருக்கும் உதவிகள் செய்து வருகிறேன். அண்மையில் எனது நண்பர்கள் சிலர் அதிர்ச்சி தரும் விஷயத்தைச் சொன்னார்கள். நடிகை ஜெயலட்சுமி எனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைதளப் பக்கம், இணையதளப் பக்கம் தொடங்கி அதன் மூலம் நன்கொடை வசூலிப்பதாகக் கூறினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன். அடுத்த சில நாட்களிலேயே வருமான வரித் துறையினர் என்னிடம் விசாரணை செய்தனர். எனது அறக்கட்டளை வரவு செலவுகளைக் கேட்டனர். அப்போது தான் ஜெயலட்சுமியின் அத்தனை மோசடியும் அம்பலமானது. இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் இரண்டு முறை விளக்கம் கேட்டும் எந்தப் பதிலும் வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து சென்னை காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
Just In




இதுகுறித்து சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், நான் நடத்திவரும் அறக்கட்டளைக்கு பதிவு எண், நீதிமன்ற அங்கீகாரம் என அனைத்து பதிவுப் பத்திரங்களும் எங்களிடத்தில் சரியாக உள்ளது. அப்படி இருக்கையில் நாங்கள் ஏன் மோசடி செய்ய வேண்டும். மேலும், நாங்கள் எங்கள் அறக்கட்டளை சார்பில் செய்து வரும் அனைத்து நற்பணிகளையும் சமூக வலைதளத்தில் பதுவிட்டு வருகிறோம். ஆனால், சினேகன் எங்கள் மீது வேண்டுமென்றே எங்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் நோக்கில் புகார் அளித்துள்ளார். மேலும், அவர் கூறியிருப்பது, நான் தனிமையில் அமர்ந்து பேசி அறக்கட்டளைக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறியிருக்கிறார். அவரும் ஒரு அறக்கட்டளை நடத்துகிறார் அவரும் அப்படி தன் வீட்டுப் பெண்களை தனிமையில் அமரவைத்து பேசி தான் நன்கொடை வசூலிக்கிறாரா என கேள்வியும் கேட்டுள்ளார். சினேகனின் இந்த செயலுக்கு பின்னால் திமுக இருப்பதாக கூறுகிறார். கமலஹாசனை திமுக விலைக்கு வாங்கிவிட்டது, திமுகவும் மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்று தான். திமுக அதிக பணம் கொடுத்து தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது என அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்