நியாய விலை கடைகளில் நிற்பது போல நீண்ட வரிசையில் காத்திருந்து மக்கள் தங்களுக்கு தேவையான மட்டன், சிக்கன் இறைச்சி வகைகளை வாங்கிச் சென்றனர்.

 


தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். அமாவாசையின் போது, கடவுள்களை வழிப்பட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் வீட்டிற்கு சென்று பலகாரங்களை பரிமாறி கொள்கின்றன. புதிய ஆடைகளை அணிந்துகொண்டு வீட்டிற்குள் தீபங்களும், வீட்டிற்கு வெளியே விளக்குகளை ஏற்றியும் தீபாவளியை கொண்டாடுகின்றன.


களைகட்டும் தீபாவளி:


ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நவம்பர் வரை தீபாவளிக்கான தேதிகள் மாறுபடும். இந்தநிலையில், இன்று நாடுமுழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து கோயில்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு புதிதாக திருமணமானவர்கள் தங்களது மாமியார் வீட்டில் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, தீபாவளி நாளான இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 




அசைவ பிரியர்கள்



தீபாவளி பண்டிகையை  புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வகைகளை உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம்.  அதே வேளையில் நாவிற்கு ருசியாக அசைவ உணவுகளை தயாரித்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு அசைவ விருந்து உண்டு மகிழ்வதும் வாடிக்கை. அந்த வகையில் தீபாவளி பண்டிகையை அசைவ விருந்துடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் காஞ்சிபுரம் பகுதிகளில், உள்ள ஆட்டு இறைச்சி கடை மற்றும் கோழி இறைச்சி  விற்பனை செய்யும் இறைச்சி கடைகளில், காலை நேரத்திலேயே ஏராளமான அசைவ பிரியர்கள் தங்களுக்கு தேவையான ஆட்டு இறைச்சி, கடை மற்றும் கோழி , இறைச்சி கடை இறைச்சி வகைகளை தங்களுக்கு தேவையான அளவிற்கு வாங்கி சென்றனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து


நியாய விலைக் கடைகளில் தான் வரிசையில் நின்று பொருட்களை வாங்குவோம்  என்ற நிலையில், தற்பொழுது காலம் மாறி, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் அமைந்துள்ள இறைச்சி விற்பனை கடையில் ஏராளமான அசைவ பிரியர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மட்டன் சிக்கன் இறைச்சி வகைகளை தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். அசைவப் பிரியர்கள் இறைச்சி கடை வாசலில் இறைச்சி வாங்கிச் செல்ல நீண்ட வரிசையில் காத்திருப்பதை வழியே சென்ற பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.




 காஞ்சிபுரத்தில்  இறைச்சி விலை பட்டியல்


  காஞ்சிபுரத்தில் சிக்கன் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய்,  மட்டன் விலை 840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.




தீபாவளி சிறப்பு ரயில்கள்: 


தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை - தாம்பரம் இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 8.10 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது. அதேபோல், தீபாவளி பண்டிகை முடித்து ஊர் திரும்புவோருக்கு ஏதுவாக நாளை நெல்லையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட இருக்கிறது. திருநெல்வேலியிலிருந்து நாளை மாலை 3.45க்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயிலானது தென்காடி, ராஜபாளையம், சிவகாசி, மதுரை, திண்டுக்கல், விழுப்புரம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.


தீபாவளி - நாளை அரசு விடுமுறை: 


தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.