சென்னை ( Chennai News ) : சென்னை பள்ளிக்கரணை ராஜலட்சுமி, 8-வது குறுக்கு தெருவை பகுதியில் வசித்து வருபவர் புவனேஷ் (28). இவர் சென்னை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பயணியாற்றி வந்தார். இவரது  தினமும் பிற்பகல் 3.30 மணியில் இருந்து இரவு 1:30 மணி வரை ஐடி நிறுவனத்தில் இவருக்கான ஷிப்ட் நேரம் என கூறப்படுகிறது. பணி முடித்து 2.30 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் பிற்பகல் 3.30 மணிக்கு புவனேஷ் தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.


தற்கொலை:


பின்னர் இரவு தனது இருக்கையை விட்டு வெளியே சென்ற புவனேஷ் திடீரென 10 வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டார். கீழே விழுந்ததில் அவரது தலை சிதைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் புவனேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், புவனேஷ் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்து 30 லட்சம் ரூபாயை இழந்ததாக தெரிகிறது. இதில், 10 லட்சம் ரூபாய் கடனாக பெற்று கட்டியுள்ளார். இவரிடமிருந்து நண்பர்கள் பணத்தை கடனாக பெற்று, அதை அவருடைய நண்பர்களை திருப்பி தராமல் இருந்து வந்துள்ளனர். அதனால், கடந்த சில மாதங்களாக கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால், கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவர் திடீரென தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்டமாக தெரியவந்துள்ளது. மேற்கொண்டு போலீஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Suicidal Trigger Warning


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)