சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்.ஆர் இராமசந்திரன் ;

Continues below advertisement

டிட்வா புயல் சென்னைக்கு அருகில் தென்கிழக்கே 40 கி.மீட்டர் தூரத்தில் நிலைக் கொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்துள்ளது. நாளை காலை வரை இதே போல் விட்டு விட்டு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை கணிப்பு தவறானது

Continues below advertisement

எண்ணூரில் 26 செ.மீ, பாரிமுனை 25 செ.மீ, ஐஸ் ஹவுஸ் 20 செ.மீ மழை பெய்துள்ளது. நாளை காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்புள்ளது. டிட்வா புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்தது தவறானது. டிட்வா புயலானது ஆந்திரா நோக்கிச் செல்லும் அல்லது கேரளா நோக்கி செல்லும் என அவர்கள் கூறிய நிலையில் சென்னைக்கு அருகிலேயே நிலைக் கொண்டுள்ளது.

பயிர்கள் கணக்கெடுப்பு பணி 

கரையை கடக்கும் போது அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. அக்டோபர் வரை வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் நிவாரணமாக ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

உயிரிழப்பு - 4 , கால்நடை இறப்பு - 582 , சென்னையில் 11 குழுக்கள் 330 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையிலுள்ளனர். அக்டோபரில் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்கள். தற்பொழுது டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. ஒரு வார காலத்தில் அதற்கான இழப்பீடு குறித்து அறிவிக்கப்படும்.

எடப்பாடி பழனிச்சாமி பதவிக்கு இது அழகல்ல

மயிலாடுத்துறை மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.தூத்துக்குடி, தஞ்சாவூரில் தலா ஒருவர் என மொத்தம் இருவர் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஏரிகள் தூர்வாரவில்லை எனஎடப்பாடி பழனிச்சாமி அரசியலுக்காக குற்றச்சாட்டுகளை கூறுகிறார். முதலமைச்சர் மனிதாபிமான அடிப்படையில் இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு உதவினார் அதனை விமர்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு இது அழகல்ல என்றார்.