சென்னையில் புதிதாக 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் இன்று (ஜூலை.14) புதிதாக 2,283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,10,809ஆக உயர்ந்துள்ளது.


தற்போது மொத்தம் 17,858 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இன்று மட்டும் 2,707 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


 






சென்னையில் கடந்த இரண்டு நாள்களாக கொரோனா பாதிப்புகள் சரிந்து வருகிறது.


 






எனினும், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒருநாள் அதிகரித்தும், மறுநாள் குறைந்தும் பதிவாகி வருகிறது. ஜூலை மாதம் தொடங்கியது முதல் இதுவரை தமிழ்நாட்டில் இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.


 






கொரோனா உயிரிழப்புகள் குறைந்து வரும் நிலையில், இன்று எவரும் உயிரிழக்கவில்லை.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.