சென்னை வானிலை :

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இங்கு, அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையின் அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் வேசான பனிமூட்டம் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதனால், அதிகாலை பொழுதில் வெளியே செல்பவர்கள் குளிரிலிருந்து பாதுகாப்புதற்கான ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

வடகிழக்கு பருவமழை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையானது, வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்துவிடும். தற்போது ஜனவரி மாதம் 15 வரை நீடிக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், அவ்வப்போது லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலையானது எப்படி இருக்கும் என்பதை காண்போம்.

Also Read: Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது

தமிழ்நாட்டின் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரம்:

02-01-2025 இன்று:

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நீலகிரி மற்றும் கொடைக்கானல் (திண்டுக்கல் மாவட்டம்) மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

03-01-2025:  நாளை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

04-01-2025 முதல் 06-01-2025 வரை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07-01-2025 மற்றும் 08-01-2025: 

கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.