Chennai Power Shutdown: சென்னையில் மாத பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ஜூலை 7 திங்கள்கிழமை சென்னையின் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்துள்ளது. காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை ஐந்து மணி நேரம் மின் தடை ஏற்படும். இருப்பினும், பணிகள் திட்டமிட்டபடி முடிந்தால், மின் விநியோகம் முன்னதாகவே மீண்டும் வழங்கப்படும்
சென்னையில் நாளைய மின்தடை: 07.07.2025
இந்நிலையில், நாளை(07.07.2025) சென்னையில் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்படும் எனற அறிவிப்பை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகளுக்காக திங்கள்கிழமை (07.07.2025) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்
சென்னையில் நாளைய மின்தடை: 07.07.2025
மாடம்பாக்கம்- ராஜாஜி நகர்
மாடம்பாக்கம், சுதர்சன் நகர், அம்பிகா நகர் ஞானானந்தா நகர், கணபதி நகர், ஜெயின் சுதர்சன் தேனுகாம்பாள் நகர், ராகவேந்திர நகர், கிருஷ்ணா நாகை, அன்சா கார்டன்
முன்னெச்சரிக்கை:
இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அதற்கேற்ப திட்டமிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு TANGEDCO அறிவுறுத்தியுள்ளது.