Chennai Power Cut: சென்னை மாநகராட்சியில், நாளை பிப்ரவரி 6ஆம் தேதி, பல்வேறு பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , மாநகராட்சியானது பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது வழக்கம். இதன் மூலம், மின் கசிவு உள்ளிட்ட பிரச்னைகள் , எதிர்காலத்தில் நிகழாமல் சரி செய்யப்படும்.  இந்நிலையில், நாளை எந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என பார்ப்போம். 


சென்னையில் நாளை மின்தடை: 06.02.2025


இந்நிலையில், சென்னையில் மாநகராட்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


இதனால், சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது  இருக்காது.


Also Read: இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை உறுதி : பிளான் போட்ட மத்திய அரசு


சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள்:


போரூர்: 


கொளப்பாக்கம்,கெருகம்பாக்கம், சபாபதி நகர், சக்ரபாணி நகர், ஸ்ரீபுரம், பி.டி.நகர், சங்கரலிகனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதானந்தபுரம் விக்னேஸ்வர நகர், இமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.


செந்தூர்புரம்: 


பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜே.ஜே.நகர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, , பி.ஜி.அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், சொர்ணபுரி நகர்,விநாயகபுரம் மற்றும் அம்மன் நகர். 


ரெட்ஹில்ஸ்: 


ஜோதி நகர், மகாமேரு நாகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர் மற்றும் கலப்கா நகர்.


திருவேற்காடு: 


கலைவாணர் நகர்,குமரன் நகர் எம்.ஜி.ரோடு, திருவாலீஸ்வரர் நகர்,  சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாளாகரம் ரோடு, பல்லவன் நகர், எம்.ஜி.ஆர்.நகர், திருமலை பாலாஜி நகர் மற்றும் சாந்தி தெரு.


Also Read: Illegal Indian Immigrants: இந்தியா வந்தடைந்த 205 சட்டவிரோத குடியேறிகள்! டிரம்ப்புக்கு இந்தியா சொல்வது என்ன?