மின் பராமரிப்பு பணி காரணமாக சென்னையின் இன்று மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும்.


அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.  பராமரிப்புப் பணிகள் முடிந்ததும் மதியம் 02.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பட்சமாக மாலை 5 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


கீழ்காணும் பகுதிகளில் இன்று ( பிப்.24 ) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


கிண்டி பகுதி : 


ராஜ்பவன், செயின்ட் தாமஸ் மவுண்ட், மடிப்பாக்கம், மூவரசம்பேட்டை, வானுவம்பேட்டை, டி.ஜி.நகர், ஆதம்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், புழுதிவாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


போரூர் பகுதி :


திருமழிசை அணைக்கட்டுச்சேரி, வயலாநல்லூர், சிட்டுக்காடு பூந்தமல்லி மாங்காடு பெரியார் நகர், பாவைத்ரா நகர், சிப்பாய் நகர், முருகப்பிள்ளை நகர், ஜே.ஜே.நகர், ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி, லீலாவதி நகர், திருமுடிவாக்கம் திருநீர்மலை பிரதான சாலை, காவலர் குடியிருப்பு, சர்மா நகர், மங்களபுரி நகர், திருமுடிவாக்கம் சிட்கோ, டவர்லைன் சாலை, கலைஞர் தெரு,  நல்லூர் கிராமம், எம்.ஜி.ஆர் நகர் எஸ்.ஆர்.எம்.சி தெல்லியர் அகரம், தனலட்சுமி நகர் ஒரு பகுதி, முத்தமிழ் நகர் காவனூர் சேக்கிழார் நகர், துரைசாமி சாலை, தேவி கருமாரியம்மன் நகர் கோவூர் குன்றத்தூர் பகுதி, அம்பாள் நகர், சத்யா நகர் அய்யப்பன்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி சாலை, சுவாமிநாதன் நகர், கன்னிகாபுரம், டி.ஆர்.ஆர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.


அம்பத்தூர் பகுதி : 


அன்னை நகர் டி.வி.எஸ் நகர், பல்லா தெரு, பார்த்தசாரதி தெரு


கே.கே.நகர் பகுதி : 


அசோக் நகர் முழுவதும், எம்.ஜி.ஆர் நகர், ஈக்காட்டுத்தாங்கல், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி ஒரு பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.


 



ஆதார் எண் இணைப்பு:


தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.  இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலானோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.


 நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.


2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என மின் துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.


மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.