சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 25-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தாம்பரம்

  • திருவேங்கடம் நகர்
  • மேலண்டை தெரு
  • தெற்கு தெரு
  • பூர்ணதிலகம் தெரு
  • கல்யாண் நகர்
  • வைகை நகர்

முடிச்சூர்

  • ரங்கா நகர்
  • அன்னை இந்திரா நகர்
  • சாரங்கா அவென்யூ
  • கேப்டன் சசிகுமார் நகர்
  • திருவள்ளுவர் நகர்
  • காமராஜர் நெடுஞ்சாலை
  • பேட்டை தெரு
  • கண்ணகி தெரு
  • மேட்டு தெரு
  • பஞ்சாயத்து போர்டு ரோடு
  • சக்ரா அவென்யூ

பெருங்களத்தூர்

  • பாரதி அவென்யூ
  • சித்ரா அவென்யூ
  • பாலாஜி நகர்
  • குறிஞ்சி நகர்
  • காகபுஜண்டர் நகர்
  • காமராஜர் ஹை ரோடு
  • சடகோபன் நகர்

போரூர்

  • லட்சுமி அவென்யூ
  • முகலிவாக்கம் மெயின் ரோடு
  • ராமச்சந்திரா நகர்
  • பாலாஜி நகர்
  • அன்னை வேளாங்கண்ணி நகர்
  • குமாரி நகர்
  • சிவாஜி நகர்
  • ஓம் சக்தி நகர்
  • எம்ஆர்கே நகர்
  • எல் மற்றும் டி நகர்
  • மாதா நகர்

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம்  மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.