சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, செவ்வாய்க் கிழமையான நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 12-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கோடம்பாக்கம்
டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை (பவர் ஹவுஸ் முதல் ரயில் பாதை வரை), இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர், ரங்கராஜபுரம் பகுதி, பரகேசபுரம், காமராஜர் காலனி 1-வது முதல் 8-வது தெரு, அஜீஸ் நகர், அத்ரேபுரம் 1, 2-வது தெருக்கள், ஆண்டவர் நகர், அண்ணா நெடும் பாதை, வட்டச்(Circular) சாலை, சௌராஷ்டிரா நகர், சங்கராபுரம், சூளைமேடு ஹை ரோடு, கில் நகர், VOC பிரதான சாலை, VOC 1 முதல் 5-வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு 1-வது முதல் 8-வது தெரு, அழகிரி நகர் பிரதான சாலை, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோஅடிகள் தெரு, ஈதில்ராஜ் தெரு, ஐயப்பா நகர், 100 அடி சாலை.
பெருங்குடி
தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து ரோடு, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், வீரமாமுனிவர் தெரு, இளங்கோ நகர், காமராஜ் தெரு, காந்தி தெரு, பெரியார் சாலை, கவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி தோட்டம், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூகி வளாகம்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை
தெற்கு கட்டம், மொகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2-வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, SSOA வளாகம், கல்யாணி எஸ்டேட், நடேசன் நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.