செங்கல்பட்டு சிறுவர்களை கத்தியை மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

 

 தொடர் திருட்டு சம்பவங்கள்


 

பாண்டிச்சேரி ரெட்டியாராபேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிமுகமது. இவரது மகன் அமீர் அப்துல் காதர் (20) இவர் இருச்சக்கர வாகனத்தை திருடுவது, வீடுபுகுந்து திருடுவது வழிப்பறி செய்வது உள்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய அமீர் அப்துல் காதர் மீது  கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார்.

 

இருசக்கர வாகன திருட்டு


 

இந்நிலையில் இவர் பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. கடந்த இரண்டு மாதங்களில் காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ரத்னம் நகரில் உள்ள கருவேப்பிலை வியாபாரி மகேஷ் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடுகிறார்.

 

 கத்தியை காட்டி திருட்டு


 

அதனையடுத்து, செங்கல்பட்டு காய்கறி  மார்க்கெட்  அருகே  மேட்டுத்தெருவில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடுகிறார். அதே காய்கறி மார்க்கெட் பூசனிக்காய் வியாபாரியிடம் பூசனிக்காய் வாங்குவது போல் பாவனை காட்டி கல்லாவில் இருந்த 64 ஆயிரம் ரூபாய் திருடி சென்றது என குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். 

 

ஓரினச்சேர்க்கை


 

இந்த வாலிபர் இந்த குற்றச்சம்பவங்களையும் தாண்டி  செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் 10 முதல் 13வயது வரை உள்ள சிறுவர்களை குறிவைத்து அவர்களை கத்தியை காட்டி மிரட்டி  ஒவ்வொரு முறையும் ஒரு சிறுவன் என திட்டமிட்டு சிறுவனை  காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதேபோல் நான்கு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார்.

 

 தனிப்படை போலீசார்


 

அதனடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ்கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து அமீர் அப்துல் காதரை தேடிவந்கனர். போலீசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர் தாம்பரம் பகுதியில் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படையினர் தாம்பரம் சென்று அமீர் அப்துல் காதரை மடக்கி பிடிக்க முயற்ச்சித்த போது தப்பித்து ஒட முயற்சித்தபோது எதிரில் வந்த காரில் பலமாக மோதி கீழே விழுந்தார். 

 

 கீழே விழுந்து உடைந்த கால்


 

இதில் காலில் பலத்த காயமடைந்த அமீர் அப்துல் காதரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டு அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி அவரை மீண்டும்  வருகிற 29ஆம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.   சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,தாம்பரம்  திருவள்ளூர் ,பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்களை திருடுவதை முக்கிய தொழிலாக வைத்து வந்துள்ளார். திருடும் இருசக்கர வாகனங்களை சென்னையில் விற்று அந்த பணத்தை வைத்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் சம்பந்தப்பட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து தற்பொழுது சிறையில் அடைத்துள்ளனர்