வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.22 கோடி மதிப்புடைய, போதைப் பொருள் மற்றும் போதை மாத்திரைகளை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்து, நைஜீரியா, பிரேசில் நாடுகளைச் சேர்ந்த 4 பேர் உட்பட, மொத்தம் 5 பேரை கைது செய்து விசாரணை.

 

 விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு


 

சென்னைக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள் கடத்தப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய போதை தடுப்பு பிரிவான என்.சி. பி எனப்படும்  நார்கோட்டிக் கண்ட்ரோல் பீரோவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து என்.சி. பி தனி படையினர், சாதாரண உடைகளில், சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். 

 

நைஜீரிய பெண்


 

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இருந்து, சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்த, நைஜீரிய நாட்டு இளம் பெண் உட்பட இரண்டு பேரை என்சிபி அதிகாரிகள் பிடித்து சோதனை நடத்தினர். அந்த நைஜீரிய பெண் அணிந்திருந்த, ஆடைக்குள் 1.8 கிலோ கோக்கையின் போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு இருவரையும் கைது செய்து, சென்னை அண்ணா நகரில் உள்ள அவர்களுடைய அலுவலகத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

 முகவரியை வைத்து பிடித்த போலீஸ்


இந்த லையில் நெதர்லாந்து நாட்டிலிருந்து, சரக்கு விமானம் மூலம் வந்த பார்சல் ஒன்றை, என்.சி. பி அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றி, சோதனை நடத்தினர். அந்தப் பார்சலில் 1.4 கிலோ போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதோடு அந்தப் பார்சலில் இருந்த முகவரியின் படி, புதுச்சேரி மற்றும் பெங்களூரில் இருவரை கைது செய்தனர். இவர்கள் இருவரும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள். அதோடு பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் இந்த போதை கடத்தல் விவகாரத்தில் கைது செய்தனர். இந்த பிரேசில்  நாட்டவரிடம் இருந்து, 15 கிராம் கோக்கையின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

22 கோடி மதிப்புடைய கொக்கையின்


 

இதை அடுத்து என். சி. பி அதிகாரிகள் மொத்தம் ரூ. 22 கோடி மதிப்புடைய கொக்கையின் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, பிரேசில் மற்றும் நைஜீரியா நாடுகளைச் சேர்ந்த 4 பேர், இந்தியர் ஒருவர் ஆகிய  5 பேர்களை, மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சென்னை விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே போதை பொருட்கள் கடத்தும்  நிகழ்வு அதிகரித்து வருகிறது

 


 என்.சி.பி விசாரணை


இதுகுறித்து  என்.சி. பி விசாரணையை துவங்கி இருக்கிறது  இதுவரை 22 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  நான்கு வெளிநாட்டு அவர் உட்பட  ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாட்டில் இருந்து போதை போலவே கடத்தி உள்நாட்டில் விற்பனைகள் ஏற்பட்டது தெரிய வந்திருக்கிறது.  முதற்கட்டமாக அவர்கள் பின்னணி குறித்து ஆய்வு மேற்கொண்ட நிலையில், அதற்கு பின்னால் இருக்கும் முக்கிய நபர்களை  அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதன் அடிப்படையில் அடுத்த  கட்ட விசாரணையை துவங்க உள்ளது