செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், வித்யா பாரதி தமிழ்நாடு என்ற அமைப்பு சார்பில் ,  தேசிய கல்விக் கொள்கை - 2020 செயல்படுத்துதல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  தொடர்ந்து ஆசிரியர்கள் மத்தியில் பேசுகையில், இதுவரை இந்திய நாட்டில் இதுவரை 60 மற்றும் 80-களில் இரண்டு முறை கல்விக்கொள்கைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பொழுது மூன்றாவது முறையாக கல்வி கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால்   தேசிய அளவில் தற்போது கொண்டு வரப்பட உள்ள கல்விக் கொள்கையானது முதல் கல்வி கொள்கை என்றே சொல்லலாம். 



 

தேசிய அளவில் தற்போது ஏன் கல்விக் கொள்கை புதிதாக தேவை என்றால், சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகிறது , உலக மக்கள் தொகையில் தற்போது இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்தியா விரைவில் முதல் இடத்திற்கும் வரலாம். வறுமை குறித்த சற்று பின் தங்கியுள்ளோம் என தெரிவித்தார். இந்தியா பொருளாதார ரீதியில் வேகமாக வளரும் நாடாக இருந்து வருகிறது.

 



 

இந்தியா சுதந்திரம் கிடைத்துவிட்ட பொழுது மகாத்மா காந்தியிடம்,  ஏன் இந்தியா சுதந்திரம் அடைந்ததை கொண்டாடவில்லை இப்பொழுது தான் நம் சுதந்திரமாக இருக்கிறோமே என கேட்ட பொழுது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியே விட்டனர். ஆனால் அவர்கள் நம்முடைய  மூளையில் இன்னும் தங்கியுள்ளனர். நம் மூளையிலிருந்து அவர்கள் வெளியே செல்ல வேண்டுமென்றால், அவர்கள் நம்மை ஆட்சி செய்த ஆண்டுகளில் பாதியாவது தேவைப்படும் எனக் கூறினார். எனவே நாட்டை கட்டமைக்க வேண்டியது இன்றியமையதாக உள்ளது. பிரிட்டிஷ் அரசு நம்மை ஆட்சி செய்த பொழுது, நம்முடைய கல்வி முறையை அழித்துவிட்டார்கள் எனக் கூறினார்.



 

தற்பொழுது இந்தியாவில் தாய்மொழி வழி கல்வி இல்லை, நாம் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்றுக் கொண்டு வருகிறோம். பிறமொழி கற்றுக் கொள்வது நல்லதுதான். ஆங்கிலத்தில் படிப்பது தான் பெரியது என்று கிடையாது. பிரான்ஸ், சைனா, ரஷ்யா ,ஜெர்மனி போன்ற நாடுகளில் அவரவர் மொழிகளிலே படித்து வருகின்றனர். அறிவியல் பாடத்தை கூட அவர்கள் மொழியிலே கற்றுக் கொள்கின்றனர். அவரவர் தாய்மொழியில் படிப்பது நல்லது என பேசினார். ஏன் அது இந்தியாவில் முடியாது,  இந்தியாவின் அறிவு களஞ்சியத்தை மீட்டெடுக்க வேண்டும் என பேசினார்.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர