இறுதி ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிற ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement


தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். 


கொரோனா பெருந்தொற்றுகளால் கடந்த ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபிறகு கடந்த சில மாதங்களாகக் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 


இந்த நிலையில் பொறியியல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல்/ மே மாதத்தில் 8ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. அதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. கல்லூரி படிப்பை முடித்த மாணவர்கள் வேலைவாய்ப்புக்காகத் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுள்ளது.


பிற ஆண்டு மாணவர்களுக்கு விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்வது எப்படி?


coe1.annauniv.edu/home/


aucoe.annauniv.edu/regular_result


ஆகிய இரண்டு முகவரிகளை க்ளிக் செய்து, செமஸ்டர் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.




coe1.annauniv.edu/home/என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.


அதில், மாணவர்களின் லாகின் பகுதியில் பதிவு எண், பிறந்த தேதி மற்றும் Captcha-வைப் பதிவு செய்ய வேண்டும். 


அதன்பிறகு மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


பாடத்திட்டம் மாற்றம்


20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே  (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.


ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது. 


தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.