செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த நாவலுாரைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெனிபர் இவர்களுக்கு, இரட்டை பிறவியாக ஆண் மற்றும் பெண் குழந்தைகள் பிறந்தன. தற்போது குழந்தை பிறந்து 5 மாதங்கள் ஆகின்றன இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை சுறுசுறுப்பாக இருந்துள்ளது. ஆனால் ஆண் குழந்தை சுறுசுறுப்பு இல்லாமல் மந்தமாக குழந்தை இருந்துள்ளது. மேலும் ஆண் குழந்தையின் கால்கள் அசைவின்றி இருந்துள்ளன .
இதுக்குறித்து குழந்தையின் தாய் ஜெனிபர்கூறுகையில் , குழந்தைக்கான ஊசி மருந்து மட்டும், 16 கோடி ரூபாய் என்கின்றனர். அது தவிர மருந்து செலவு இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. குழந்தையை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுமக்கள் உதவ வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீருடன் கூறினார். மிகவும் அரிதான இந்நோய்க்கான மருந்தை, வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். ஊசி மருந்தின் விலை 16 கோடி ரூபாய். 2 வயதுக்குள் செலுத்தா விட்டால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து என, மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் விபரங்கள் மற்றும் உதவிக்கு, ஆண்ட்ரூசை, 90030 99823, 73054 11803 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 9790268319 ,7397395122
உங்களுடைய பங்களிப்பை அளிக்க:
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Also Read | Chennai Rain News LIVE Tamil: சில மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு: நாளை வரை கனமழை எச்சரிக்கை!