சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து பெருமளவு தங்கம் கடத்தி வருவதாக  சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினா் கடந்த 2 தினங்களாக சென்னை சா்வதேச விமானங்களில் வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து,சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி சோதனையிட்டனா்.



இந்நிலையில் துபாயிலிருந்து வந்த ஃபிளை துபாய், எமரேட்ஸ், ஏா் இந்தியா, சாா்ஜாவிலிருந்து ஏா் அரேபியா ஆகிய 4 விமானங்களில் வந்த பயணிகளை சோதனையிட்டனா். அப்போது சென்னையை சோ்ந்த 2 பெண் பயணிகள், ராமநாதபுரம் மற்றும் ஆந்திராவை சோ்ந்த 4 ஆண் பயணிகள் ஆகிய 6 போ்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களை நிறுத்தி சோதணையிட்டனா். அவா்களுடைய உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த தங்க செயின்கள் மற்றும் தங்கக்கட்டிகளை கைப்பற்றினா். 6 பேரிடமிருந்து 2.67  கிலோ தங்கத்தை கைப்பற்றினா். அதோடு அவா்களின் சூட்கேஸ்களில் மறைத்து வைத்திருந்த 14 ஐபோன்கள், 8  லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனா்.தங்கம் மற்றும் ஐபோன், லேப்டாப்களின் சா்வதேச மதிப்பு ரூ.1.40 கோடி. இதையடுத்து கடத்தல் பயணிகள் 6 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்துகின்றனா்.



அதைப்போல் நேற்று முன்தினம் துபாய்,சாா்ஜாவிலிருந்து வந்த எமரேட்ஸ், ஏா் அரேபியா விமான பயணிகளை சோதனையிட்டதில் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 2 ஆண் பயணிகளை சுங்கத்துறை சோதனையிட்டதில், அவா்களின் உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த 466 கிராம் தங்கப்பசை மற்றும்  45 கிராம் தங்க செயின் மொத்தம் 511 கிராம் தங்கத்தை கைப்பற்றினா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.23.53 லட்சம். இதையடுத்து 2 பயணிகளையும் சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.



சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் நடத்திய சோதனைகளில் துபாய், சாா்ஜா ஆகிய நாடுகளிலிருந்து வந்த 6 விமானங்களில் 2 பெண்கள் உட்பட 8 பயணிகளிடமிருந்து ரூ.1.64 கோடி மதிப்புடைய 3.18 கிலோ தங்கம், ஐபோன்கள், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



பேஸ்புக் பக்கத்தில் தொடர



ட்விட்டர் பக்கத்தில் தொடர