Today Weather Forecast: "சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று (20-11-2025) காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது"

Continues below advertisement

சென்னை வானிலை மையம் அறிவிப்பு 

வானிலை மையத்தின் அறிக்கையின்படி, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. அது இன்று மேற்கு வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

நாளை, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற 24-ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு. வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும்.

Continues below advertisement

திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டிற்கு காலை 10 மணி வரை கனமழை எச்சரிக்கை 

இன்று (20-11-2025) காலை 10 மணி வரை பாண்டிச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோக தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், விழுப்புரம், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அடுத்த இரண்டு நாட்களுக்கு எங்கெங்கு மழை ?

21-11-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22-11-2025: கூடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை கடலூர் சிவகங்கை மாவட்டங்களில் ஓரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.