செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாளை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் எந்த பள்ளியும் இயங்கக்கூடாது என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்
செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெற உள்ளதால், நாளை (1-11-2025) பள்ளிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை எந்த பள்ளியும் செயல்பட வேண்டாம் என்று முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நாளை நடைபெறும் பயிற்சிக்கு கலந்து கொள்ளுமாறு மாவட்ட முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார். அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருப்பதால், நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு என்ன ?
இந்த விடுமுறை குறித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்தல் துறை சார்பில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கான பயிற்சி நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளதால், முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து இன்று மாலை அறிவிக்கப்பட்ட (1-11-2025) சனிக்கிழமை வேலை நாள் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
எனவே மாவட்டத்தில் நாளை எந்த பள்ளியும் செயல்பட வேண்டாம் என்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலகங்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.