திருவாரூர் அருகே பவித்திரமாணிக்கம் திருவிக நகர் பகுதியில் விக்னேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒன்றைரை ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகே உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கான பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டபோது இந்த மின் கோபுரத்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கூறி விக்னேஷ் மின்வாரிய அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
திருவாரூரில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
கு.ராஜசேகர் | 23 Mar 2022 03:19 PM (IST)
குடியிருக்கும் வீட்டில் இருந்து 15 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க வேண்டும் என அரசாணை உள்ள நிலையில் அதனை மீறி 6 அடி தூரத்தில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க முற்படுவதாக புகார்
மின்வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த நபர்
Published at: 23 Mar 2022 05:33 PM (IST)