பல ஆண்டுகளாக, அந்தந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கு பெண் தொழில்முனைவோர்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை உலகம் கண்டுள்ளது. பெண்கள் தொழில்முனைவோர் தினம், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 அன்று, பெண்கள் பொருளாதாரத்திற்கு ஆற்றும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது, மேலும் இந்த தினம் வணிகப் பெண்களுக்கு மிகவும் வரவேற்கத்தக்க சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பெண்கள் தொழில்முனைவோர் தினத்தில், ஒரு தொழிலதிபர் புதிய உயரத்திற்கு வர உதவும் ஐந்து குறிப்புகளைப் பார்க்கலாம்.


கருத்து மற்றும் போட்டியாளர்கள் ஆராய்ச்சி


உங்கள் வணிகம் செழிக்க வேண்டுமெனில், தொழில் வல்லுனர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது அவசியம். இது உங்கள் வணிகத்தின் குறைபாடுகளை மட்டுமல்ல, நீங்கள் சரியாக என்ன செய்கிறீர்கள் என்பதையும் புரிந்துகொள்ள உதவும். இதேபோல், போட்டி ஆராய்ச்சி நடத்துவதும் சந்தையை நன்கு புரிந்துகொள்ள உதவும். பெண்கள் நிபுணர்கள் உட்பட உங்கள் போட்டியாளர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் உங்கள் நுகர்வோருக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொள்வதும் இதில் அடங்கும். எதிர்மறையான கருத்துக்களை கேட்பதில் தயக்கம் வேண்டியதில்லை, உங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று அதன்மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.



மிகச்சிறந்த நெட்வொர்க்


வியாபாரம் என்பது தனியாகச் செய்யக்கூடிய ஒன்றல்ல. உதவி கேட்கவும், ஒத்துழைக்கவும், இணைத்துக்கொள்ளவும் பயப்பட வேண்டாம். நெட்வொர்க்கிங் உங்களுக்கு வழிகாட்டுதல் மற்றும் பொறுப்புணர்வு இரண்டையும் பெற உதவும். நீங்கள் எப்போதாவது பிரச்சினைகளிலோ, நஷ்டத்திலோ சிக்கிக்கொண்டால், நீங்கள் உருவாக்கும் இந்த அர்த்தமுள்ள நெட்வொர்க்குகள்தான் உங்களுக்காக விஷயங்களை சரிசெய்ய உதவும்.


தொடர்புடைய செய்திகள்: BCCI: இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம் - பி.சி.சி.ஐ. அதிரடி...! என்ன காரணம்..?


இலக்குகள் அமைக்கவும்


பெரிய ஒன்றைச் சாதிக்க விரும்பும் ஒவ்வொரு தொழிலதிபருக்கும் அவர்களுக்கான இலக்குகள் இருக்க வேண்டும். இதில் நீண்ட கால மற்றும் குறுகிய கால இலக்குகள் மற்றும் தொலைநோக்குபார்வைகள் ஆகியவை அடங்கும். உங்கள் நிறுவனம் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதையும், 5, 10 மற்றும் 15 ஆண்டுகளில் நீங்கள் எதைச் சாதிக்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் கண்காணிக்கவும். குறுகிய காலத்தில் உங்களை நீங்கள் எங்கு பார்க்கிறீர்கள் மற்றும் வரும் ஆண்டுகளில் நீங்கள் எங்கு இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்கள் என்பதையும் ஆராய்ந்து அறிய வேண்டும்.



நெகிழ்வான சூழல்


உங்கள் வேலைக்கும் இல்லற வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையை வைத்திருப்பது உங்கள் வளர்ச்சிக்கு அவசியம். நாள் முழுவதும் உங்கள் தலையை வேலையில் புதைப்பது உங்களை மந்தமானதாக உணர்கிறது மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையைத் தவிர்க்க, உங்களுக்காக ஒரு பொழுதுபோக்கைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். உங்களுக்கான நேரம் அந்த நாளில், வேலை செய்வதை விட அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் வணிகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உங்கள் மன நலத்திற்கும் அவசியமானது.


கற்றுக்கொண்டே இருங்கள்


கற்றல் ஒரு வாழ்நாள் செயல்முறை மற்றும் அதில் ஈடுபடுவதற்கு எதுவும் தாமதமில்லை. சந்தை எப்போதும் மாறிக்கொண்டே இருக்கும் இடம். அதில் செழிக்க, உங்கள் களத்தில் நீங்கள் முதலிடத்தில் இருக்க வேண்டும். உங்கள் வணிகத் துறையுடன் தொடர்புடைய படிப்புகள் மற்றும் வழிகாட்டல் திட்டங்களைத் தேடுங்கள். நீங்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டால், உங்கள் வணிகத்தை வளர்ப்பதற்கான புதிய மற்றும் தனித்துவமான வழிகளைக் காண்பீர்கள்.