Summer Tips: கோடைக்கால சமையலில் இதுக்கெல்லாம் கண்டிப்பா நோ சொல்லுங்க.. இதோ லிஸ்ட்

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள் மற்றும் உணவில் சேர்க்க வேண்டியவைகள் பற்றி கீழே காண்போம்.

Continues below advertisement

கொளுத்தும் கோடை வெப்பம் நம் செரிமான மண்டலத்தின் செயல்திறனை குறைக்கும். செரிமான மண்டலம் மாறுதல்களுக்கு உள்ளாகும். கோடைக்காலத்தில் உடலின் வெப்பநிலை சமமாக இருக்க வேண்டியது அவசியம். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இதற்கு ஐஸ் கிரீம், மோர் உள்ளிட்டவைகளெல்லாம் போதாது. உங்கள் உணவுவிலும் பருவ காலத்திற்கு ஏற்றதுபோல் இருக்க வேண்டும். உடலை குளிர்விக்க இயற்கையான வழிகளை கையாள வேண்டும். அதற்கு உங்கள் டயட் கன்ட்ரோல் மிகவும் முக்கியம். கோடைக்காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். சிக்கன், மீன் உள்ளிட்டவைகளை எண்னெய் பொரித்து உண்ணாமல் வேகவைத்து சாப்பிடலாம். 

Continues below advertisement

நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மசாலாப் பொருட்களும் கோடைகாலத்திற்கு ஏற்றவை அல்ல. உதாரணமாக, சிவப்பு மிளகாய் தூள் கோடையில் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் இது உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் மற்றும் வயிற்றில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். கோடையில் உணவில் சில மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது உங்கள் செரிமான அமைப்பு மற்றும் உடல் வெப்பநிலையில் மாற்றங்களைச் செய்யும். 

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய மசாலா பொருட்கள் மற்றும் உணவில் சேர்க்க வேண்டியவைகள் பற்றி கீழே காண்போம்.

கொத்தமல்லி வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும், பெருஞ்சீரகம் விதைகள் நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கின்றன. புதினா உடல் வெப்பநிலையைக் குறைக்கிறது, அதே நேரத்தில் சீரக விதைகள் வீக்கம் மற்றும் அமில ரிஃப்ளக்ஸ் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும்.

இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.


கொத்தமல்லி:

இது உடலில் இருந்து வியர்வையை வெளியேற்ற உதவுகிறது. இதனால், உடலின் வெப்பநிலை குறையும்.  புத்துணர்ச்சியும் இருக்க உதவுகிறது. இதனால் செரிமான மண்டலம் ஹேப்பியாக வேலை செய்யும்.

  • ஒரு டீஸ்பூன்  தனியாவை எந்த உணவு சமைத்தாலும் சேர்க்கலாம்.
  • கொத்தமல்லி இலைகளை வெள்ளரி மற்றும் தக்காளியுடன் சேர்த்து சால்ட்  தயாரிக்க பயன்படுத்தலாம்.
  • கொத்தமல்லி சட்னி அடிக்கடி சாப்பிடலாம்.

பெருஞ்சீரகம்: 

 இதில் உள்ள வைட்டமின் சி செரிமானத்தை தூண்டுகிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது.


  • சமைக்கும் உளவுகளில் சிறிது பெருஞ்சீரம் தாளிக்கலாம்.
  • பெருஞ்சீரக டீ நல்ல சாய்ஸ்.
  • சாலட் உணவுகள் சாப்பிடும்போது பெருஞ்சீரத்தை பொடித்து அதில் தூவி சாப்பிடலாம்.

சீரகம்:

சீர்+ அகம்- சீரகம் -

உடலின் உட்புறத்தை சீராக்குகிறது என்று பொருள்.  இந்திய சமையலில் இது மிக முக்கியமானது. இதன் நறுமணம், சுவை ஆகியவற்றை விடவும், இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது. கோடைக்காலத்திற்கு ஏற்ற மசாலா.

  • சமையில் தினமும் சீரகம் சேர்க்கலாம்.
  • மோர், எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றுடன் சீரகத் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

புதினா:

புதினா ஒரு சிறந்த மூலிகை. இது அஜீரணக் கோளாறுகளை தடுக்கும். அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அழற்சி தொடர்பான நெஞ்செரிச்சல் உள்ளிட்டவைகளை போக்கும். கோடை வெயிலிலும் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.

  •  டீயில்  புதினா சேர்க்கலாம்.
  • புதினா சட்னி சாப்பிடலாம்.
  • லெமன் புதினா ஜூஸ் குடிக்கலாம்.

கோடைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவைகள்:


சிவப்பு மிளகாய் தூள்:

இதை அதிகப்படியான அளவு எடுத்துக் கொண்டால், வயிறு, தொண்டையில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இது உடல் வெப்பநிலையையும் அதிகரிக்கும். முடிந்தவரையில் காரம் குறைவாக சாப்பிடுவது நல்லது.

பூண்டு:

உடல் எடையை குறைப்பது,  பசியைக் கட்டுப்படுத்துவது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் இருந்து பல நன்மைகள் இதில் உள்ளன. இருப்பினும், குளிர்காலத்தில் இதை அதிகமாக உட்கொள்வது நல்லது, கோடையில் இது உடலின் வெப்பநிலையை உயர்த்தும். ஆகையால், பூண்டை உணவில் குறைவான அளவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி:

இஞ்சியில், செரிமானத் திறன் உள்ளிட்ட பல நன்மைகள் இருந்தாலும், கோடையில் இதை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். அதிக அளவில் எடுத்துக் கொண்டால், நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளையும் இது ஏற்படுத்தும். அதனால்,அதிக அளவு இஞ்சி சாப்பிடுவதை தவிக்கவும். 

கோடைக்கு ஏற்றவாறு காரம் மற்றும் மசாலா குறைவாக இருக்கும் உணவை சாப்பிட்டு ஆரோக்கியாக இருங்கள்.

Continues below advertisement
Sponsored Links by Taboola