மேகமலைக்குசெல்லவேண்டுமென்றஆசைவருவதற்கு, அதன்பெயரேஎனக்குபோதுமானதாகஇருந்தது. அதுபெயருக்குஏற்பமேகங்களும், மலைகளும்நிறைந்தஇடம். ஆம், மேகங்கள்ஆட்சிசெய்யும்இடம்மேகமலை, அதிகம்அறியப்படாதமலைவாழிடம். இயற்கையைஇரசிக்கவிரும்புபவர்கள், ஊர்ச்சுற்றவிரும்புவர்கள்விரும்பிச்செல்லும்இடம். ஊட்டி, கொடைக்கானல், வால்பாறைபோன்றமலைவாழிடங்களுக்குபதிலாகபுதிதாகஒரிடத்திற்குசெல்லவிரும்புபவர்களுக்குஉகந்தஅழகியஇடம், மேகமலை.

மேகமலைபயணம்

தேனிமாவட்டம்சின்னமனூரில்இருந்து45 கிலோமீட்டர்தொலைவில்உள்ளதுமேகமலைஎன்னும்அழகியமலைக்கிராமம். மேற்குதொடர்ச்சிமலைகளில்சிறந்தநிலஅமைப்பைகொண்டஇடம். திராட்சைதோட்டங்களும், தென்னைமரங்களும், காற்றாலைகளும்நிறைந்தகிராமச்சாலைகளில்செல்லும்போதே, நீலவானில்வெண்மேகங்கள்நம்மைவரவேற்கும். தென்பழனிஎன்றஇடத்தில்இருந்துமலைப்பாதைதுவங்கும். அங்குள்ளவனத்துறைசோதனைசாவடியில்விபரங்களைஅளித்துவிட்டுசெல்லவேண்டும். காலை6 மணிமுதல்மாலை6 மணிவரைமட்டுமேமலைப்பாதையில்வாகனஓட்டிகள்செல்லஅனுமதிக்கப்படுவார்கள். என்றாலும்மாலை4 மணிக்குள்சோதனைச்சாவடியைகடக்கவேண்டும்எனவனத்துறையினர்கண்டிப்புடன்அறிவுறுத்துகின்றனர்.

மலைப்பாதைவளைந்துநெளிந்துமலையேறும். புதிதாகபோடப்பட்டதார்சாலையில்எந்தசிரமமும்இன்றிமலையேறலாம். தனியார்தேயிலைதோட்டநிர்வாகத்தின்பொறுப்பில்இருந்தபோது, குறுகியசாலைகள்மிகவும்மோசமானநிலையில்இருந்ததால்வாகனங்கள்செல்லசிரமத்திற்குஉள்ளாகிவந்தன. அச்சாலைகள்அரசிடம்ஒப்படைத்தபின்னர்தான், புதியதார்சாலைகள்போடப்பட்டுள்ளன. 2017 ம்ஆண்டிற்குபின்னர்போடப்பட்டதார்சாலைகளால், மேகமலைக்குவருகின்றசுற்றுலாபயணிகளின்எண்ணிக்கைவெகுவாகஅதிகரித்துள்ளது.

தமிழ்வாசம்வீசும்கொண்டைஊசிவளைவுகள்

மலைப்பாதையில்ஆங்காங்கேகுட்டுக்குட்டாககிடந்தயானைச்சாணங்கள்அச்சத்தைதந்தன. பகல்நேரம்என்பதால், எந்தவனவிலங்கும்குறுக்கிடவில்லை. அப்பாதையில்18 கொண்டைஊசிவளைவுகள்உள்ளன. அக்கொண்டைஊசிவளைவுகளுக்குஅழகானபண்டையதமிழ்பூக்களின்பெயர்கள்சூட்டப்பட்டு, பெயர்பலகைகள்வைக்கப்பட்டுள்ளன. வேங்கைப்பூ, மகிழம்பூ. இருவாட்சிப்பூ, காந்தள்பூ, வெட்சிப்பூ, குறிஞ்சிப்பூ, மல்லிகைப்பூ, குவளைப்பூ, அனிச்சம்பூ, கொன்றைப்பூ, வஞ்சிப்பூ, மருதம்பூ, முல்லைப்பூ, வாழைப்பூ, வஞ்சிப்பூ, தும்பைப்பூ, தாழம்பூ, தாமரைப்பூஆகியபூக்களின்பெயர்கள்அந்தகொண்டைஊசிவளைவுகளுக்குமேலும்அழகூட்டும்வகையில்அமைந்துள்ளது.

மலைப்பாதைவனப்பகுதிகள்மற்றும்தேயிலைத்தோட்டங்கள்ஊடாகசென்றது. செல்லும்வழியிலேயேமேகங்கள்சாலைக்குஇறங்கியிருந்தன. மேகங்கள்பொழிந்தசாரல்மழையும், குளிர்காற்றும்பயணத்தைதித்திப்பாக்கின. வழியெங்கும்ஆங்காங்கேஅருவிகள்கொட்டிக்கொண்டிருந்தன. பசுமையானநிலபரப்புகண்களுக்குவிருந்துவைத்தன. மேகமலைசுற்றுலாவணிகவலைக்குள்இன்னும்சிக்கவில்லைஎன்பதால், பசுமைமாறாதஇயற்கைதவழ்ந்துவிளையாடுகிறது. உயர்ந்தமலைகள், ஆழமானபள்ளங்கள், மலைகளைகட்டித்தழுவிக்கொண்டிருக்கும்வெண்நிறமேகங்கள், அழகியஏரிஎனஇயற்கைஅழகுகள்கொட்டிக்கிடந்தன.

திரும்பியபக்கம்எல்லாம்தேயிலைதோட்டங்களில்தொழிலாளர்கள்பணியாற்றிக்கொண்டிருப்பதைபார்க்கமுடியும். அப்பகுதிமக்களின்முக்கியவாழ்வாதாரம்தேயிலை. தேயிலையும், காபியும்அதிகளவில்இங்குபயிரிடப்படுகிறது. பெரியஅளவிலானகடைகள்இங்குஇல்லை. ஹைவேவிஸ்பகுதியில்சிலஉணவகங்கள்உள்ளன. தங்குவதற்குசிலதனியார்ரிசார்டுகள்உள்ளன. யானை, புலிஉள்ளிட்டவனவிலங்குகளின்வாழ்விடமாகவும்மேகமலைஉள்ளது. சின்னச்சுருளிஇங்குதான்உற்பத்தியாகிறது.

அசரவைக்கும்மகாராஜாமெட்டு

மேகமலையில்அசரவைக்கும்ஒரிடம்மகாராஜாமெட்டு. தார்சாலைகள்முடிந்துகரடுமுரடானசாலையில்பயணிக்கவேண்டியிருக்கும். சாலைஅமைக்கும்பணிகள்நடைபெற்றுவருவதால், வாகனங்களில்பயணிப்பதுசற்றுசிரமத்தைத்தரும். அச்சிரமங்கள்இயற்கையின்பேரழகில்மறைந்துபோகும்.

மகாராஜாமேட்டிற்குசெல்லடாடா சுமோ போன்ற வாகன வசதிஉண்டு. 1000 ரூபாய்முதல்1500 வரைவசூலிக்கப்படுகிறது. நமதுகார்களைநிறுத்திவிட்டு, அவற்றில்சென்றுதிரும்பலாம். இருசக்கரவாகனங்களிலும்செல்லமுடியும். சுற்றிலும்தேயிலைத்தோட்டங்களுக்குஊடாககரடுமுரடானமண்சாலைகள்ஏறிஇறங்கி, வளைந்துநெளிந்துசெல்லும். மகாராஜாமேட்டிற்குசெல்லவனத்துறைநபர்ஒருவருக்கு30 ரூபாய்கட்டணம்வசூலிக்கின்றனர்.

கண்ணுக்குஎட்டியதூரம்வரைநீலவானம்விரிந்துகிடக்கும். அதற்குகீழேவெண்நிறமேகங்கள், பஞ்சுபோலஅங்குமிங்கும்உலவிக்கொண்டிருக்கும். மேற்குதொடர்ச்சிமலைகள்பசுமைஉடைஉடுத்திமிடுக்காககாட்சிதரும். மலைமுழுவதும்மேகங்களின்ஆட்சிநடந்துகொண்டிருக்கும். மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது, மேகங்கள் நமது தலைக்கு மேலும்,கால்களுக்கு கீழும் மிதந்து கொண்டு இருக்கும். மலைகளில்ஆங்காங்கேஅருவிகள்கொட்டிக்கொண்டிருக்கும். இவற்றிக்குகீழ்நிலமும்பச்சைபசேலெனகண்களுக்குவிருந்துதரும். குளிர்காற்றுமுகத்தைவருடிச்செல்லும். இரம்மியமானஇச்சூழல்மனதிற்குஇதமாகஅமையும். இந்தநிலப்பரப்புபுதுமையானஅனுபவத்தைதரக்கூடும். அதுமட்டுமின்றிபலஅழகானபுகைப்படங்களும்கிடைக்கக்கூடும். அதனால்போட்டோசூட்நடந்தசிலநிமிடங்களைசெலவிடவேண்டிவரும்.

தனியார்நிறுவனங்களுக்குசொந்தமானதேயிலைதோட்டங்கள்மேகமலைமுழுக்கபரவியிருக்கின்றன. இங்குடீத்தூள்உருவாகும்முறையைநபர்ஒருவருக்கு100 ரூபாய்கட்டணம்செலுத்திதெரிந்துகொள்ளலாம். மேகமலையில்அண்மைகாலமாகசுற்றுலாபயணிகளின்வரத்துஅதிகரித்துவருகிறது.

இயற்கையின்பேரழகைகுறைந்தசெலவில்கண்டுஇரசிக்கஉகந்தஇடம்மேகமலை. அதிகஎதிர்பார்ப்புகள்இன்றிஒருமுறைசென்றுவரலாம். அதிகஅளவிலானபசுமையானநினைவுகளைதரக்கூடும்.

(பயணங்கள்முடிவதில்லை)