கொரோனா பெருந்தொற்றை அடுத்து முடங்கிப் போன சுற்றுலாத்துறை ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறது. 


இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையால் மிகவும் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் முடங்கிப் போனத் தனது சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்காக சில நூதன முயற்சிகளில் இறங்கியுள்ளது. அந்த முயற்சிகளில் ஒன்று  ’கேரவன் கேரளா’. டைல்மர் இந்தியா நிறுவனம் பாரத் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள சொகுசு கேரவன் வாகனத்தை கேரள சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. படுக்கையறை, குளியலறை, கிச்சன், டிவி, மற்றும் லாஞ்ச் வசதிகளுடன் கூடிய இந்த காரவன் வாகனம் கேரளா முழுவதும் சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் கூட்டநெரிசலைத் தவிர்த்து கொரோனா காலத்தில் ஊர்சுற்ற சுற்றுலாத்துறையின் இந்த வாகனத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 




முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அண்மைய நிலவரப்படி அங்கே ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,27,301க்கு மேல் என அதிகரித்தது. தமிழ்நாடு, கர்நாடகாக, மகராஷ்டிரா, ஆந்திரா  போன்ற மாநிலங்களில் கண்டறியப்படும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக சரிந்தது. இருப்பினும், 10,௦௦௦க்கும் அதிகமான தினசரி பாதிப்புகளை கேரளா கடந்த ஒரு மாத காலமாக பதிவு செய்து வந்தது.இந்த ஏற்றத்திற்கு காரணம் என்ன?



முன்னர் பிரபல வைராலஜிஸ்ட் மருத்துவர் ககன்தீப் காங் இது குறித்து தனது ட்விட்டர் குறிப்பில் பதிவு செய்திருந்தார். அதில் " கொரோனா பரிசோதனை மற்றும் நோய்த் தொற்று கண்டறியப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறைவான  இறப்பு விகிதம் இருப்பதால்  பெருந்தொற்று அம்மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பை வலுவிழக்க செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கேரளாவைப் போல் தயார் நிலையில் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். 



உதாரணமாக, கொரோனா தொற்று பரிசோதனை மூலம்  தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 3.5 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்ட மாவட்ட அளவிலான  சீரோ சர்வே ஆய்வில், மொத்த மக்கள்தொகையில் 23% பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எனவே, 7ல் 1 என்றளவில் தான் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் கண்டறியப்படுகிறது.  மேலும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை விட தடுப்பூசி நிர்வகிப்பதில் கேரளா முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில், 45% பயனாளிகளுக்கு முதல்கட்ட தடுப்பூசியும், 10%க்கும் அதிகமான பயனாளிக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டுள்ளன