கிரிக்கெட்டுக்கு மட்டுமே அறியப்பட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய உணவு அட்டவணையைக் கொண்ட ரீலைப் பகிர்ந்து கொண்டார்.


வீடியோவில் அவரது முன்னால் ஒரு டேபிள் முழுக்க உணவு வைக்கப்பட்டிருந்தது. அதில் சாதம், கறி, வதக்கிய காய்கறிகள் மற்றும் பல உணவுகள் இருந்தன. கையில் ஒரு வடா பாவை வைத்துக் கொண்டு, தனது நாள் முழுவதும் எப்படி இருக்கும் என விளக்கிக் கொண்டிருந்தார்.இந்த ரீல் தற்போது படு வைரல்!






சச்சினின் சாப்பாடு:


அவர் மும்பையில் மதிய உணவோடு தனது நாளைத் தொடங்கினார். பின்னர் 2023 டி20 சர்வதேச போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் போட்டிக்காக அகமதாபாத்திற்குச் சென்றார். அங்கு அவர் தேநீர் மற்றும் சிற்றுண்டி சாப்பிட்டார். போட்டியை முடித்துக் கொண்டு கோவாவுக்குச் சென்று இரவு உணவு சாப்பிட்டார். "எனது காலை உணவு எங்கே இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்று வீடியோவில் இதற்கு அடுத்து சச்சின் கேள்வி எழுப்புகிறார். சச்சினின் ரசிகர்கள் அவரின் இந்த உணவுப் பழக்கத்தைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர்.


முன்னதாக, முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும், பழம்பெரும் பயிற்சியாளரும், இந்திய கிரிக்கெட்டுக்கான தனது பங்களிப்பிற்காக இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெறுபவரும் ஆன குருசரண் சிங், கவாஸ்கர், டெண்டுல்கர் மற்றும் கோலி போன்ற வீரர்கள் இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக எப்போதும் இருப்பார்கள் என்றும், புதியவர்கள் ஒருபோதும் அவர்களை போல வரமுடியாது என்றும் கூறியிருந்தார்.


தலைசிறந்த பேட்ஸ்மேன்கள்:


பல ஆண்டுகளாக, இந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை வென்றவர்கள். இந்திய கிரிக்கெட்டில் தலைசிறந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும், ஒரு சிலரை மட்டும் கூறுவது மற்றவர்களுக்கு அநீதியாக இருக்கும், ஆனால் அவர்கள் கூட சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் சிறந்தவர்களில் சிறந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்வார்கள். முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரும், பழம்பெரும் பயிற்சியாளருமான குர்சரண் சிங், இந்திய கிரிக்கெட்டுக்கான தனது பங்களிப்பிற்காக இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர், கவாஸ்கர், டெண்டுல்கர் மற்றும் கோலி போன்ற வீரர்கள் இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக எப்போதும் இருப்பார்கள் என்றும், புதியவர்கள் அவர்களை ஒருபோதும் அவர்களது புகழை மறைக்க முடியாது என்றும் கூறினார்.