பொன்மாலைப்பொழுதில், சூடாக ஒரு கப் டீ… வாழ்வின் அர்த்தங்களை கற்றுத்தரும் நேரமல்லவா அது! நம் வாழ்வோடு ஒன்றிவிட்ட, பிரிக்கமுடியாத மந்திர பானமாக மாறிவிட்ட தேநீர், இந்தியாவில் எத்தனை எத்தனையோ விதமாக கிடைக்கிறது, தண்ணீருக்கு பிறகு அதிகம் குடிக்கும் ஒரு பானம் என்றால், அது ’டீ’ தான். அது தரும் புத்துணர்ச்சியை டீ பிரியர்கள் மட்டுமே அறிவார்கள். வாழ்வின் மிக சாதாரணமான தருணங்களை ஒரு சிறிய கொண்டாட்டமாக மாற்றும் தேநீரை கொண்டாட ஒரு தினம் தான் சர்வதேச தேநீர் தினம்! 


தேயிலை வரலாறு


இந்த சிறப்பான பானத்தை கொண்டாடும் வகையில், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, இந்தியா மற்றும் தான்சானியா உள்ளிட்ட பல நாடுகளில் சர்வதேச தேநீர் தினம் டிசம்பர் 15 அன்று கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தேநீர் அருந்தப்பட்டதற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன. சீனப் பேரரசர் ஷென் நங் அவரும் அவரது வீரர்களும் மரத்தடியில் தஞ்சம் புகுந்தபோது இந்த பானத்தை முதலில் சுவைத்தார். அவர்கள் தண்ணீர் கொதிக்க வைக்கும் போது, காற்று வீசியதால் சில தேயிலைகள் கொள்கலனில் விழுந்து கலந்தன. அப்போதுதான் டீ என்னும் பிரபலமான பானம் கண்டுபிடிக்கப்பட்டது.



வனிகமான தேயிலை


பண்டைய சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டதிலிருந்து, தேயிலை உலகின் பல பகுதிகளில் பிரதானமாக மாறிவிட்டது. இது மத சடங்குகளின் சின்னமாகவும், ஆசிய கலாச்சாரத்தில் மருத்துவ குணமாகவும் மாறியது. சீனாவின் தேயிலை ஏகபோகத்துடன் போட்டியிட ஆங்கிலேயர்கள் 1824 இல் தேயிலை பயிரை வணிக ரீதியாக அறிமுகப்படுத்தினர். இந்தியாவில் அசாம், மேற்கு வங்காளம், கர்நாடகா மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் இது விளைகிறது. 


தொடர்புடைய செய்திகள்: புயலாக மாறுதா? 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகுமா? வானிலை அப்டேட் என்ன?


தேயிலை தின வரலாறு


இந்த தினம் முதன்முதலில் 2005 ஆம் ஆண்டு புதுதில்லியில் அனுசரிக்கப்பட்டது. உலகெங்கிலும் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 2015 இல் ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கு (FAO) முன்மொழிந்தது. இந்த ஆண்டுக்கான தீம் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், கடந்த ஆண்டு, "தேயிலை மற்றும் நியாயமான வர்த்தகம்" என்ற கருப்பொருளின் முதன்மை நோக்கம் தேயிலையின் பொருளாதார மதிப்புகளை மேம்படுத்துவதாகும். குறிப்பாக தேயிலை வளரும் பகுதிகளில் உள்ள மக்கள் வறுமையில் வாடுகின்றனர். நியாயமான வர்த்தகம் அவர்களின் முன்னேற்றத்திற்கு பயன்படும். 



முக்கியத்துவம்


இந்த நாள் நிலையான தேயிலை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தீவிர வறுமையைக் குறைப்பதிலும், பசியை எதிர்த்துப் போராடுவதிலும், இயற்கை வளங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும் தொழில்துறை தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவதை உறுதிசெய்ய உலகளாவிய, பிராந்திய மற்றும் தேசியத் தலைவர்களுக்கு இது வாய்ப்பளிக்கிறது.


குவோட்ஸ்


“தேநீரை தந்த கடவுளுக்கு நன்றி! தேநீர் இல்லாமல் உலகம் என்ன செய்யும்? அந்த காலம் எப்படியிருந்திருக்கும்? நான் தேநீருக்கு முன் பிறக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" - சிட்னி ஸ்மித்


"தேநீர் இருக்கும்போது நம்பிக்கை இருக்கிறது" - சர் ஆர்தர் பினெரோ


"சாகாமல் இருக்க எனக்கு எந்த ஆர்வமும் இல்லை, ஆனால் தேநீரை சுவைப்பதற்காக மட்டும் வேண்டும்" - லு டுங்


"என் அன்பே, என் தலையில் உள்ள குழப்பத்தை நீக்க நீங்கள் எனக்கு ஒரு கோப்பை தேநீர் கொடுத்தால், உங்கள் பிரச்சனைகளை நான் நன்றாக புரிந்து கொள்ள முடியும்." - சார்லஸ் டிக்கன்ஸ்


"ஒவ்வொரு கோப்பை தேநீரும் ஒரு கற்பனையான பயணத்தை பிரதிபலிக்கிறது" - கேத்தரின் டூசல்