கடுமையான கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த நாம் அனைவரும் மழைக்காலத்தை ரசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். இப்போது சீசன் இறுதியாக வந்துவிட்டது, அழகான வானிலையை அனுபவிக்கும்போது சூடான கப் தேநீருடன் நமது காலையைத் தொடங்க ஏதுவான காரணத்தை நாம் தேடுகிறோம். மழைக்காலம் என்பது மழை தேநீர் கவிதைகளுக்கானது மட்டுமல்ல. இதைத் தவிர, நாம் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாத ஒரு விஷயம் இருக்கிறது, அதுதான் நமது ஆரோக்கியம். மழைக்காலம் உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கலாம், குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கிறது. எனவே, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகளை உட்கொள்வது கட்டாயமாகும்.


 நாவப்பழம்


யுஎஸ்டிஏ தரவுகளின்படி, ஜாமூனில் 1.41 மி.கி இரும்பு, 15 மி.கி கால்சியம் மற்றும் 18 மி.கி வைட்டமின் சி உள்ளது. தவிர, இந்த நாவல் பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கொலாஜனை உருவாக்கவும் உதவுகிறது. 


ஆப்பிள்கள்
"ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் டாக்டரை விலக்கி வைக்கிறது" என்ற மிகவும் பிரபலமான பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது நூற்றுக்கு நூறு சதவிகிதம் உண்மை. ஆப்பிளில் வைட்டமின் சி மற்றும் க்வெர்செடின் எனப்படும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது, எந்த நோயையும் தடுக்கிறது.


மாதுளை






இந்த பழம் அதன் சாறுத்தன்மை மிக்க முத்துக்கள் மற்றும் அசாதாரண சுவைக்காக அறியப்படுகிறது. தவிர, குடல் ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் நிறைந்துள்ளன. இவை சில கூடுதல் கிலோவைக் குறைக்க உதவும் காரணிகளாகும். பிரபல ஊட்டச்சத்து நிபுணரும் வாழ்க்கைப் பயிற்சியாளருமான லூக் குடின்ஹோவின் கூற்றுப்படி, மாதுளை கிரீன் டீயை விட நச்சுத்தன்மையை நீக்க உதவும்.


வாழை


வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது, இது நோயெதிர்ப்பு மண்டலத்தை சரியாக செயல்பட வைக்க உதவுகிறது. சுவையான ஸ்மூத்தீஸ் மற்றும் ஷேக்குகள் தயாரிக்க இந்த பழத்தை அடிப்படையாக பயன்படுத்தலாம்.