ஸ்வீட்கார்ன் பலருக்கும் ஃபேவரைட் ஸ்நாக். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் அதேநேரம் ருசியாகவும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வீட்டிலேயெ ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். 


ஸ்வீட் கார்ன்  பக்கோடா


தேவையான பொருட்கள்:


ஸ்வீட்கார்ன்  -  ஒரு கப்


கடலை மாவு - ஒரு கப்


சீரகம் தூள் - ஒரு ஸ்பூன்


மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன்


உப்பு -தேவையான அளவு


கொத்தமல்லி - சிறிதளவு


எண்ணெய் (பொரித்தெடுக்க) - தேவையான அளவு


செய்முறை


ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, ஸ்வீட்கார்ன்,  சீரகம் தூள், மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும். அடுப்பில் மிதமான தீயில் கடாயை வைத்து அதில் பக்கோடா பொரித்தெடுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நல்லா சூடானதும் ஸ்வீட்கார்ன் கலவையை சிறிய உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். ருசியான டோஃபு பக்கோடா ரெடி





பிரெட் Poha


 தேவையான பொருட்கள்: 


பிரெட் - 1 கப்


வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )


வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்


வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு


தாளிக்க:


கடுகு - 1/2 டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 4


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


வேர்க்கடலை - ஒரு கைப்பிடி


எலுமிச்சை சாறு - தேவையான அளவு ( தேவையில்லையெனில்)


செய்முறை: 



  •  பிரெட்டை டோஸ்ட் செய்து எடுத்துகொள்ள வேண்டும். அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். 

  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள், கருவேப்பிலை, வேர்க்கடலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 

  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறவும்.

  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். 

  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். 

  • சுவை கொத்தமல்லி பிரெட் போகா ரெடி.


இதே முறையில் அவல் சேர்த்தும் இந்த உப்புமாவை செய்து சாப்பிடலாம்.


தினமும் அவல் சேர்த்து கொள்ளலாமா?


அவல்  மிக எளிமையாக  செரிமானம் ஆக கூடிய குறைந்த கலோரி அதிக நார்சத்து கொண்ட  உணவு.இது எடுத்து கொள்வதால், உடல்  எடை அதிகமாகாமல்  இருக்கும். உடல் எடை குறைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.  மேலும் நீரிழிவு நோயாளிகள் இதை ஒரு காலை அல்லது இரவு உணவில் சேர்த்து கொள்ளலாம். 


இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். எப்போதும், இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்து போய் இருப்பவர்களுக்கு இந்த அவல் உணவு சிறந்த மாற்றாக இருக்கும். அவல் உப்புமா, அவல் பாயசம், அவல் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அவல் லட்டு, அவல் புட்டு போன்றவை கொடுக்கலாம். இது ஆரோக்கியமான உணவாகவும், குழந்தைகள் எடுத்து கொள்வதால், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.


மிக குறைந்த நேரத்தில் சமைக்க கூடியது. மேலும், அரிசியில் இருந்து அவல் தயாரிக்கப் பட்டது. இப்போது சிவப்பு அரிசியில் இருந்து அவல் தயாரிக்கப்படுகிறது. கம்பு, சோளம், போன்ற சிறுதானியங்களில் இருந்தும் அவல் தயாரிக்கப் படுகிறது. இது அரிசியில் இருக்கும் வைட்டமின் பி சத்துகள் நிறைந்து இருக்கிறது. ஆண்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த , க்ளுட்டன் இல்லாத உணவு. இதில் நார்சத்து, மற்றும் இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. பாலிஷ் செய்து சத்து குறைந்த வெள்ளை அரிசிக்கு இந்த அவல் சிறந்த மாற்றாக இருக்கும்.