நாய்கள் மற்றும் பூனைகளை தத்து எடுத்து வளர்ப்பவர்கள் கிட்டத்தட்ட அவர்களைத் தங்கள் மனிதக் குழந்தைபோலவே கருதிதான் வளர்க்கிறார்கள். குட்டிகளை வளர்ப்பதை அவ்வப்போது பதிவு செய்து தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுகிறார்கள்.. அதனை சில சமயங்களில் நாய்க்குட்டிகளும் பூனைக்குட்டிகளுமே ரசிக்கின்றன. ஆன்லைனில் பதிவுசெய்து பகிரும்போது, அந்த அழகான தருணங்கள் பெரும்பாலும் மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றன. இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள ஒரு தருணம் அதற்குச் சிறந்த உதாரணம். இந்த வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. நாயின் நண்பர் அதன் தலையில் மசாஜ் செய்வதற்கு நாயின் ரியாக்‌ஷனை வீடியோ காட்டுகிறது.


இந்த வீடியோ முதலில் டிக்டோக்கில் வெளியிடப்பட்டது மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் மீண்டும் பகிரப்பட்டது. கண்களை மூடிக்கொண்டிருக்கும் ஒரு நாய்க்கு மசாஜ் செய்வதை அந்த வீடியோவில் பார்க்கலாம். யாரோ ஒருவர் உச்சந்தலையில் மசாஜரைப் பயன்படுத்தி நாயின் தலையை சொறிவதைக் காணலாம்.






இந்த வீடியோ பகிரப்பட்டதில் இருந்து, மக்கள் அழகான அந்த வீடியோவில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். 


ஒருவர் தனது கமெண்ட்டில் “அந்தப் பெண் என்ன சொன்னார்? தயவுசெய்து யாராவது மொழிபெயர்க்க முடியுமா? அந்த நாய் நன்றாக உணர்கிறதா என்று அவர் கேட்கிறார்  என்று நினைக்கிறேன், ”என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனாளர் கேட்கிறார்.அதற்கு, மற்றொரு நபர்  “ஆமாம்.அதேதான்” என்று பதிலளித்தார். மற்றொரு நபர், "மிகவும் அழகாக இருக்கிறது" என்று கூறியுள்ளார். மூன்றாவது நபர், “இது மிகவும் அழகாக இருக்கிறது!! அவற்றில் ஒன்று என்னிடம் உள்ளது, அது ஆச்சரியமாக இருக்கிறது!!” எனப் பதிவு செய்திருந்தார். நான்காவது பயனர் எழுதுகையில், "இது மிகவும் நம்பமுடியாத வகையில் அழகாக இருக்கிறது." எனப் பதில் அளித்திருந்தார்.