தமிழ்நாட்டு பெண் தொழில்முனைவோரை மேம்படுத்திட, TN- RISE திட்டத்தை வழிநடத்த, மேலாண்மை செய்ய மற்றும் இதர பணிகளுக்கு பல்வேறு வல்லுநர்களை தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் வரவேற்பதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அது என்ன ஊரகப் புத்தாக்கத் திட்டம்?


தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம் (TNRTP) எனப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது (VKP), உலக வங்கி துணையுடன், 2017 –ல் தொடங்கப்பட்டது. இத்திட்டம், ஊரக மேம்பாட்டுத் துறை மற்றும் ஊராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகும்.


இத்திட்டத்திற்கென உலக வங்கியும், தமிழ்நாடு அரசும் 70:30 என்ற பங்களிப்பில், 919.73 கோடி ரூபாய், அதாவது (123.74 டாலர்) ஒதுக்கீடு செய்துள்ளன.


இத்திட்டமானது, தொழில் மேம்பாடு, நிதியுதவியை அணுகும் வாய்ப்பு மற்றும் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துதல் வழியாக ஊரக சமூகங்களை நிலையாகக் கட்டமைத்து, செல்வ வளத்தைப் பெருக்குவதன் மூலம், வறுமை ஒழிப்பையும் தாண்டிய மேம்படுத்தப்பட்ட நுட்பங்களை (வழிமுறைகள்) பயன்படுத்தி, ஊரக மாற்றத்தை ஏற்படுத்துவதை தொலைநோக்காகக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 38 மாவட்டங்களில் 31 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், “TN-RISE” (Tamil Nadu Rural Incubator and Start-up Enabler) திட்டத்தின்கீழ்தமிழ்நாட்டு பெண் தொழில்முனைவோரை மேம்படுத்த, மேலாண்மை செய்ய மற்றும் இதர பணிகளுக்கு பல்வேறு வல்லுநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவோர் மகளிர் இணை உருவாக்கல் மையத்தில் பணிபுரிய உள்ளனர். 


என்னென்ன பணியிடங்கள்?


* தலைமைச் செயல் அதிகாரி - எம்பிஏ, தொழில்நுட்பம் அல்லது பொறியியல் அல்லது அறிவியல் அல்லது கணினிப் பயன்பாடுகளில் முதுநிலைப் பட்டம்


* புரோஜெக்ட் லீட் (PROJECT LEAD)- 4 பிரிவுகளின்கீழ் பணி


1.Enterprise Development and Formalization பிரிவு


2.Product Development, Innovation and Incubation பிரிவு


 3.Business Plan and Financial Linkages பிரிவு


4.Branding, Packaging and Marketing Linkages பிரிவு


* கணக்கு அதிகாரி மற்றும் நிறுவன செயலாளர் (Accounts Officer cum Company Secretary)


* YOUNG PROFESSIONAL


ஊதியம் எவ்வளவு?


தொழில்முறை திறன் மற்றும் வின்ணப்பதாரரின் அனுபவத்தைப் பொறுத்து அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்பிப்பது எப்படி?


https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdNTbu8Ex6_GXfV0v5L4yLF7pU_rUUtyz7Ma37bCJbF1viv5A/viewform என்ற கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று தமிழக ஊரகப் புத்தாய்வுத் திட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளோர் ஏப்ரல் 15-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 


தொலைபேசி எண்: 91 44 4344 3200


இ- மெயில் முகவரி: tnrtpstate@gmail.com


கூடுதல் விவரங்களுக்கு: இணைய முகவரி: vkp-tnrtp.org


வேலைக்கான அறிவிக்கையை முழுமையாகக் காண: https://www.vkp-tnrtp.org/wp-content/uploads/2024/03/Notification.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டியது அவசியம்.