திருவண்ணாமலை உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


சமூக நல உறுப்பினர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்


விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.


குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது தொழில் புரிபவராக இருக்க வேண்டும்.


வயது வரம்பு


 விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.


 மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


ஊதிய விவரம்


அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 21,2024 அன்று வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல்கம்,
வட்டாட்சியர் அலுவலக வளாகம்,
பெரியார் சிலை அருகில்,
திருவண்ணாமலை


தொடர்பு எண் - 6382614197


விண்ணப்பிக்க கடைசி தேதி - 06.03.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022383.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் வேலை


விழுப்புரத்தில் உள்ள சமூக பாதுகாப்பு துறையில் தலைவர் மற்றும் உறுப்பினரை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்


தலைவர் மற்றும் உறுப்பினர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்


விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல்/ மனநலம்/ சட்டம்/ சமூகப் பணி/ சமூகவியல்/ மனித ஆரோக்கியம்/ கல்வி/ மனித மேம்பாடு/ சிறப்புக் கல்வி ஆகியவற்றில் எதேனும் ஒன்றில் கண்டிப்பாக பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.


விழுப்புரம் சமூக பாதுகாப்புத் துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 35 வயதுக்கு குறையாமலும், 65 வயதுக்கு அதிகம் ஆகாமலும் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை


இந்த வேலைக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால் அஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் இல்லை.


 மாவட்டம் சமூக பாதுகாப்பு அலுவலகத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


ஊதிய விவரம்


அரசு விதிமுறைகளின்படியே தேர்வாகும் நபர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.


வேலைக்கான அறிவிப்பு பிப்ரவரி 17,2024 அன்று வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி 


The Director,
Directorate of Social Defence,
 No.300, Purasaiwalkam High Road, Kellys, 
Chennai – 600 010.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 02.03.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2024/02/2024021726.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.