தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்ள வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


சமுதாய அமைப்பாளர்


உள்ளாட்சி அமைப்பு:


சிவகாசி, அருப்புக்கோட்டை, இராஜபாளையம், விருதுநகர், திருவில்லிபுத்தூர், சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளுக்கு இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


மொத்த பணியிடங்கள் - 8 


கல்வித் தகுதி என்ன?


விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். MS Office தெரிந்திருக்க வேண்டும். 


விருந்துநகர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 


05.08.20.2024-ன் படி, அதிகபட்சமாக 35 வயதிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


இருசக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 


மகளிர் குழுக்கள் திட்டம் தொடர்பாக ஒரு ஆண்டு கால களப்பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பகுதி அளவிலான கூட்டமைப்பில் இரண்டு ஆண்டுகள் உறுப்பினராக உள்ளவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக ரூ.16,000/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


www.virudhunagar.nic.in - என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 


தேர்ந்தெடுக்கும் முறை:


இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும். நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 05.09.2024


https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/08/2024082415.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு தொடர்பாக கூடுதல் விவரங்களை காணலாம். 


https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2024/08/2024082377.pdf - என்ற இணைப்பில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.