காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் நல நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகிளில் கீழ்க்கண்ட விவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவுள்ளது. 3 பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம், சமூக அறிவியல் - 2), 23 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.


காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்


காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக  அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.  மேற்கண்ட காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது.  மேற்கண்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.15,000/- இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.12,000/-  வழங்கப்படும்.  இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்டதாரி / இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி விவரம்


தற்போதைய அரசு நடைமுறையில் உள்ள விதிகளைப் பின்பற்றி, அதன்படி வரையறுக்கப்பட்ட  கல்வித் தகுதியுடன்,  பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் தெரிவுக்கான ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் (TET-Paper I,II) பங்கேற்று வெற்றி பெற்றவர்கள், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் ஆதிதிராவிடர் / பட்டியல் இனத்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள் (இல்லையெனில்) அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கு   முன்னுரிமை  அளிக்கப்படும்.


தற்காலிக நியமனம்


மேற்கண்ட இந்த தற்காலிக நியமனம் செய்யப்படும் நாள்முதல் ஏப்ரல் 2025 வரையிலும் தற்காலிகமாக மேற்கண்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.   பணிநாடுநர்கள் ஆசிரியர் காலிப்பணியிடங்களை காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை  அணுகி தெரிந்து கொண்டு அந்த பணியிடங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.


மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தனது எழுத்து மூலமான விண்ணப்பத்தினை உரிய கல்வித்தகுதிச் சான்று  ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் 08.07.2024 மாலை 5.45க்குள் ஒப்படைத்திட இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்,  தெரிவித்துள்ளார்.