செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பதிவேடு உதவியாளர் மற்றும் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பிரதான மருத்துவமனையாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமில்லாமல் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பதிவேடு உதவி யாளர் மற்றும் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு, தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


காலியாக உள்ள பணியிடங்கள்


செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், தாய் - சேய் ஒருங்கிணைப்பு மற்றும் மகப்பேறு பிரிவு காவலர்கள் - 3, மருத்துவமனை பணியாளர்கள் - 5, பல் சிகிச்சை நிபுணர், செவித் திறன் பரிசோதகர், இயன்முறை பரிசோதகர், பாது காவலர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், தீவிர சிகிச்சை பதிவேடு உதவியாளர் தலா ஒன்று என, 14 காலி பணியிடங்கள், ஒப்பந்த அடிப்படை‌யில் பணி நியமனம் செய்யப்பட உள்ளன.


விண்ணப்பிப்பது எப்படி ?


இப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை, https://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதி விறக்கம் செய்து கொள்ளலாம். 


இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து, அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு, வரும் 21 ஆம் தேதிக்குள் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர், செங்கல்பட்டு என்ற முகவரிக்கு நேடியாகவோ அல்லது விரைவு தபால் மூல மாகவோ அனுப்பி வைக்கலாம் அல்லது மருத்துவமனை முதல்வரின், cmpc_tn@ yahoo.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி பணியிடங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.‌ மேலும் எந்த ஒரு காலத்திலும் இந்த பணியிடங்கள் நிரந்தரம் செய்யப்படாது எனவும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.